கர்நாடக மாநிலத்தில் மாணவ, மாணவியரிடம் இஸ்ரோ தலைவர் சோம்நாத் கலந்துரையாடினார். அப்போது அவர் கூறிய தாவது: இஸ்ரோவின் நிதி தேவைக்காக அரசை மட்டுமே நாங்கள் சார்ந்திருக்கவில்லை. வணிக வாய்ப்புகளை நாங்களே உருவாக்குகிறோம். அதன் மூலம் வருவாய் ஈட்டுகிறோம். இஸ்ரோவுக்காக செலவிடும் தொகை 2.54 மடங்காக திரும்ப கிடைக்கிறது. அதாவது ஒரு ரூபாய் செலவு செய்தால் ரூ.2.54 வருவாய் கிடைக்கிறது. 2023-ம் ஆண்டில் இஸ்ரோ வருவாய் 6.3 பில்லியன் டால ராக உயர்ந்து உள்ளது. நடப்பு 2024-ம் ஆண்டில் இஸ்ரோவின் வருவாய் 8.4 பில்லியன் டாலராக உயரும். இவ்வாறு அவர் கூறினார்.
Latest article
குமரி எஸ்பி அலுவலகத்தில் பாஜகவினர் புகார் மனு
கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டியில் நடைபெற்ற ஜீவா விழாவில் யூடியூபர் செந்தில் வேல் ஹிந்து தெய்வங்களை கொச்சைப்படுத்தி பேசியதாக பாஜகவினர் குற்றம் சாட்டியுள்ளனர். இதனைக் கண்டித்து, பூதப்பாண்டி காவல் நிலையத்தில் பாஜக சார்பில் மனு...
நாகர்கோவில்-தாம்பரம் சிறப்பு ரயில் சேவை: அறிவிப்பு
நாகர்கோவில் மற்றும் தாம்பரம் இடையே சிறப்பு ரயில் சேவை இம்மாதம் 26ஆம் தேதி முதல் அடுத்த மாதம் 26ஆம் தேதி வரை இயக்கப்படும். நாகர்கோவிலில் இருந்து ஞாயிற்றுக்கிழமை இரவு 11:15 மணிக்கு புறப்படும்...
குமரியில் கனரக வாகனங்களால் விபத்து: தமுமுக வலியுறுத்தல்
கன்னியாகுமரி மாவட்டத்தில், குறிப்பாக குளச்சல், திக்கணங்கோடு, கருங்கல், மார்த்தாண்டம், தக்கலை, பார்வதிபுரம் பகுதிகளில் விதிமுறைகளை மீறி அதிவேகமாக செல்லும் கனரக வாகனங்களால் விபத்துகள் ஏற்பட்டு உயிர் சேதமும், காயங்களும் ஏற்படுவதாக தமிழ்நாடு முஸ்லிம்...