குளச்சல் அருகே ரீத்தாபுரம் பேரூராட்சியில் உள்ள கரையாக்குளம் விவசாயத்திற்கும், 3 ஆழ்குழாய் கிணறுகளுக்கும் ஆதாரமாக உள்ளது. கடந்த ஒரு வருடமாக குளத்தின் படித்துறை பகுதியில் விழுந்து கிடக்கும் மரத்தால் பொதுமக்கள் குளிப்பதற்கு சிரமப்படுகின்றனர். அடுத்த மாதம் தென் மேற்கு பருவமழை தொடங்குவதற்குள் மரத்தை அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
