பாரிமுனையில் 500 ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்: வியாபாரிகள் சாலை மறியல்

0
22

நீ​தி​மன்ற உத்​தர​வுப்​படி, பாரிமுனையில் 500-க்​கும் மேற்​பட்ட ஆக்​கிரமிப்பு கடைகள் அகற்​றப்​பட்​டன. இதற்கு எதிர்ப்பு தெரி​வித்து வியா​பாரி​கள் சாலை மறியல் போராட்​டத்​தில் ஈடு​பட்​டனர்.

சென்னை பூக்​கடை, பாரிமுனை என்​எஸ்சி போஸ் சாலை நடை​பாதை​யில் 500-க்​கும் மேற்​பட்ட கடைகள் ஆக்​கிரமித்து கட்​டப்​பட்​டிருந்​தன. இதனால் அந்த பகு​தி​யில் அரசு பேருந்​துகள், கார் உள்பட அனைத்து வித​மான வாக​னங்​களும் செல்​வ​தில் சிரமம் இருந்​தது. இதனால், எப்​போதும் வாகன நெரிசல் ஏற்​பட்டு போக்​கு​வரத்​தில் பாதிப்பு ஏற்​பட்​டது.

இதையடுத்​து, ஆக்​கிரமிப்பு கடைகளை அகற்ற வேண்​டும் என வலி​யுறுத்தி நீதி​மன்​றத்​தில் பொதுநல வழக்கு தொடரப்​பட்​டது. இதுதொடர்​பாக விசா​ரணை மேற்​கொண்ட நீதி​மன்​றம், சாலையை ஆக்​கிரமித்​துள்ள கடைகளை அகற்ற வேண்​டும் என மாநக​ராட்​சிக்கு உத்​தர​விட்​டது. இருப்​பினும், இந்த உத்​தரவை நடை​முறைப்​படுத்​து​வ​தில் தாமதம் ஏற்​பட்​டது.

இதையடுத்​து, நீதி​மன்​றம் மீண்​டும் ஒரு உத்​தரவு பிறப்​பித்​தது. அதில், ஆக்​கிரமிப்பு கடைகளை அகற்​றி, அதுகுறித்த ஆவணங்​களை நீதி​மன்​றத்​தில் சமர்ப்​பிக்க வேண்​டும் என்று உத்​தர​விட்​டது.

இதையடுத்​து, சென்னை மாநக​ராட்சி ராயபுரம் மண்டல பகுதி செயற்​பொறி​யாளர் பழனி, உதவி செயற்​பொறி​யாளர் கண்​ணன், உதவி பொறி​யாளர் கார்த்​திக் தலை​மை​யில் மாநக​ராட்சி ஊழியர்​கள் ஜேசிபி இயந்​திரம், பொக்​லைன், உதவி​யுடன் நூற்​றுக்​கும் மேற்​பட்ட பணி​யாளர்​கள், ஆக்​கிரமிப்பு கடைகளை அகற்​றும் பணி​யில் நேற்று ஈடு​பட்​டனர்.

இதனால் பூக்​கடை பகு​தி​யில் பரபரப்பு நில​வியது. அசம்​பா​விதங்​கள் நடை​பெறாமல் இருக்க பூக்​கடை துணை ஆணை​யர் சுந்தர வடிவேல் உத்​தர​வின் பேரில் உதவி ஆணை​யர் தட்​சிணா​மூர்த்தி தலை​மை​யில் ஆய்​வாளர்​கள் புஷ்ப​ராஜ், பிரபு, மனோன்​மணி மற்​றும் நூற்​றுக்​கும் மேற்​பட்ட போலீ​ஸார் குவிக்​கப்​பட்டு பாது​காப்பு பணி​யில் ஈடு​பட்​டனர்.

அசம்​பா​விதங்​கள் ஏதேனும் ஏற்​பட்​டால் உடனடி​யாக அவர்​களை அழைத்​துச் செல்ல ஆம்​புலன்​ஸ், தீயணைப்பு வாக​ன​மும் தயார் நிலை​யில் வைக்​கப்​பட்​டன. இதற்​கிடையே, ஆக்​கிரமிப்பு கடைகளை அகற்ற எதிர்ப்பு தெரி​வித்து கடை உரிமை​யாளர்​கள் மற்​றும் அவர்​களது குடும்​பத்​தினர் என்​எஸ்சி போஸ் சாலை​யில் மறியல் போராட்​டத்​தில் ஈடு​பட்​டனர்.

இதனால், அந்த பகு​தி​யில் போக்​கு​வரத்து பாதிக்​கப்​பட்​டது. இதையடுத்து போலீ​ஸார் அவர்​களை கலைந்து செல்​லும்​படி அறி​வுறுத்​தினர். அவர்​கள் கேட்​காத​தால் குண்​டுக்​கட்​டாக அகற்​றப்​பட்​டனர். இதனால், போலீ​ஸாருக்​கும், வியா​பாரி​களுக்​கும் இடையே வாக்​கு​வாதம் மற்​றும் தள்​ளு​முள்ளு ஏற்​பட்​டது. இதனால், அந்த பகு​தி​யில் பரபரப்​பான சூழல்​ நில​வியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here