‘உரிமை கோரப்​ப​டாத பணத்தை மீட்டெடுங்கள்’ – நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு

0
20

உங்​கள் பணம், உங்​கள் உரிமை இயக்​கத்​தில் பங்​கேற்று உரிமை கோரப்​ப​டாத பணத்தை மீட்​டுக்​கொள்ள வேண்​டும் என பிரதமர் நரேந்​திர மோடி அழைப்பு விடுத்​துள்​ளார்.

வங்​கி​கள், காப்​பீட்டு நிறு​வனங்​கள், பங்​குச் சந்​தை, பரஸ்பர நிதி நிறு​வனங்​களில், பல ஆயிரம் கோடி ரூபாய் பல்​வேறு காரணங்​களால் பொது​மக்​களால் நீண்ட கால​மாக உரிமை கோரப்​ப​டா​மல் உள்​ளது. இந்​தத் தொகையை உரிய​வர்​களிடம் ஒப்​படைப்​ப​தற்​காக ‘உங்​கள் பணம், உங்​கள் உரிமை இயக்​கம்’ கடந்த அக்​டோபரில் தொடங்​கப்​பட்​டது.

இதுகுறித்து லிங்க்​டு இன் சமூக வலை​தளத்​தில் பிரதமர் நரேந்​திர மோடி வெளி​யிட்ட பதி​வில் கூறி​யிருப்​ப​தாவது: ”நாடு முழு​வதும் உள்ள வங்​கி​களில் ரூ.78 ஆயிரம் கோடி​யும் காப்​பீட்டு நிறு​வனங்​களில் ரூ.14 ஆயிரம் கோடி​யும், பரஸ்பர நிதி நிறு​வனங்​களில் ரூ.3 ஆயிரம் கோடி​யும் பங்கு ஈவுத் தொகை​யாக ரூ.9,000 கோடி​யும் உரிமை கோரப்​ப​டா​மல் உள்​ளன.

கடின​மாக உழைத்து சம்​பா​தித்து சேமித்த இந்த தொகையை ஒவ்​வொரு குடிமக​னும் மீண்​டும் பெற முடி​யும் என்​பதை உறு​திப்​படுத்​தவே ‘உங்​கள் பணம், உங்​கள் உரிமை இயக்​கம்’ தொடங்​கப்​பட்​டுள்​ளது. இந்த செயல் ​முறையை எளிமை​யாக​வும் வெளிப்​படை​யாக​வும் மாற்ற இந்​திய ரிசர்வ் வங்​கி, இந்​திய காப்​பீட்டு ஒழுங்​கு​ முறை மற்​றும் மேம்​பாட்டு ஆணை​யம் (ஐஆர்​டிஏஐ), இந்​திய பங்கு பரிவர்த்​தனை வாரி​யம் (செபி) மற்​றும் மத்​திய பெரு நிறுவன விவ​கார அமைச்​சகத்​தால் தனித்​தனி இணை​யதளங்​கள் தொடங்​கப்​பட்​டுள்​ளன.

மேலும், உரிமை கோராத தொகையை மீட்​ப​தற்​காக, நாடு முழு​வதும் தொலை​தூர கிராமங்​கள் உட்பட 477 மாவட்​டங்​களில் ஏற்​கெனவே முகாம்​கள் நடத்​தப்​பட்​டுள்​ளன. இதன்​மூலம் சுமார் ரூ.2 ஆயிரம் கோடி உரிய​வர்​களிடம் ஒப்​படைக்​கப்​பட்​டுள்​ளது.

எனவே, பொது​மக்​கள் தங்​கள் பெயரிலோ அல்​லது தங்​கள் குடும்​பத்​தினர் பெயரிலோ உரிமை கோரப்​ப​டாத தொகை ஏதேனும் இருக்​கிறதா என சரி​பார்த்​து, உரிமை கோரப்​ப​டாத முதலீடு இருந்தால் அதை மீட்​டுக் கொள்ள வேண்​டும். இவ்​வாறு அதில் தெரி​வித்​துள்​ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here