ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: தமிழக அணி 281 ரன்கள் சேர்ப்பு

0
61

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் தமிழ்நாடு – ஒடிசா அணி​கள் இடையி​லான ஆட்​டம் புவனேஷ்வரில் நேற்று தொடங்​கியது. டாஸ் வென்ற ஒடிசா அணி பீல்​டிங்கை தேர்வு செய்​தது. இதையடுத்துபேட் செய்த தமிழ்​நாடு அணி முதல் நாள் ஆட்​டத்​தின் முடி​வில் 83 ஓவர்​களில் 7 விக்​கெட்​கள் இழப்புக்கு 281 ரன்​கள் எடுத்​தது.

அதி​கபட்​ச​மாக பிரதோஷ் ரஞ்​ஜன் பால் 78, ஆந்த்ரே சித்தார்த் 56, ஆதிஷ் 50 ரன்​கள் சேர்த்​தனர். நாராயணன் ஜெகதீசன் 7, வித்​யூத் 12, குரு​சாமி அஜிதேஷ் 0, சோனு யாதவ் 8 ரன்​களில் ஆட்​ட​மிழந்​தனர். நிதிஷ் ராஜகோ​பால் 54, கேப்​டன் சாய் கிஷோர் 12 ரன்​களு​டன் களத்​தில் இருந்தனர்.

ஒடிசா அணி தரப்​பில் ராஜேஷ் மொகன்​டி, கோவிந்தா பாட்வார் ஆகியோர் தலா 2 விக்​கெட்​களை வீழ்த்​தினர். கைவசம் 3 விக்​கெட்​கள் மீதம் இருக்க இன்று 2-வது நாள் ஆட்​டத்தை தொடர்ந்து விளை​யாடு​கிறது தமிழ்​நாடு அணி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here