கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் அருகே அழிக்கால் பிள்ளைத்தோப்பு பகுதியில் கடந்த வாரம் பெய்த கனமழையால் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்து பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து, கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் பிரதாப் நேற்று அப்பகுதிக்கு நேரில் சென்று, மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களைப் பார்வையிட்டு, பாதிப்புகள் குறித்து விரிவான ஆய்வு மேற்கொண்டார்.
