புதுக்கடை அருகே அனந்தமங்கலத்தைச் சேர்ந்த ராஜாமணி மீது அடிதடி, மோசடி உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர் நீண்ட நாட்களாக தலைமறைவாக இருந்ததால், குழித்துறை கோர்ட் அவரை தலைமறைவு குற்றவாளியாக அறிவித்துள்ளது. அவரைப் பிடித்து ஆஜர்படுத்த புதுக்கடை போலீசாருக்கு கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இந்த தகவலை புதுக்கடை போலீஸ் இன்ஸ்பெக்டர் மாரியப்பன் தெரிவித்துள்ளார்.