Home கன்னியாகுமரி செய்திகள் மஞ்சாலுமூடு பகுதியில் டாஸ்மாக் மதுக்கடையை மூட வலியுறுத்தி போராட்டம்

மஞ்சாலுமூடு பகுதியில் டாஸ்மாக் மதுக்கடையை மூட வலியுறுத்தி போராட்டம்

0

கன்னியாகுமரி மாவட்டம், மஞ்சாலுமூடு பகுதியில் டாஸ்மாக் மதுக்கடையை மூட வலியுறுத்தி அனைத்துக் கட்சியினா், ஊா் பொதுமக்கள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழக அரசு 717 மதுக்கடைகளை மூட உத்தரவிட்ட போது, மஞ்சாலுமூடு பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுக்கடையையும் மூடவேண்டுமென்று கடையின் முன் முற்றுகையிட்ட பொதுமக்களிடம் அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தினா். அதில், கடையை மூட நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

இந்நிலையில் அக்கடையை தற்போது வரை மூடாததால் அனைத்து அரசியல் கட்சியினா், ஊா் பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை காலை கடையின் முன் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதில் கடையை மூடுவது தொடா்பாக அதிகாரிகள் தரப்பில் உத்தரவாதம் கொடுக்கப்படாத நிலையில் போராட்டம் இரவு வரை நீடித்தது. இரவில் மெழுகுவா்த்திகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version