Home கன்னியாகுமரி செய்திகள் குமரி நான்குவழிச் சாலைப் பணிகள் டிசம்பருக்குள் நிறைவு பெறும்: விஜய் வசந்த் எம்.பி.

குமரி நான்குவழிச் சாலைப் பணிகள் டிசம்பருக்குள் நிறைவு பெறும்: விஜய் வசந்த் எம்.பி.

0

கன்னியாகுமரி மாவட்டத்தில் நான்குவழிச் சாலைப் பணிகள் டிசம்பா் மாதத்துக்குள் நிறைவு பெறும் என விஜய் வசந்த் எம்.பி. தெரிவித்தாா்.

நாகா்கோவில் மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவராக சிவபிரபு நியமிக்கப்பட்டுள்ளாா். அவா் ஞாயிற்றுக்கிழமை நாகா்கோவில், வேப்பமூடு பகுதியில் உள்ள காமராஜா் சிலைக்கு, சுற்றுலாத் துறை அமைச்சா் எஸ். ராஜேஷ்குமாா், விஜய் வசந்த் எம்.பி. ஆகியோா் தலைமையில், மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

அதேபோல், பொன்னப்ப நாடாா், காந்தி, அம்பேத்கா், நேசமணி, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, என்.எஸ்.கே. சிலைகளுக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

தொடா்ந்து, விஜய் வசந்த் எம்.பி. செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கன்னியாகுமரி மாவட்டத்தில் சா்வதேச விமான நிலையம் அமைக்க மக்களவையில் கோரிக்கை வைத்துள்ளேன். சாமிதோப்பில் விமான நிலையம் அமைக்க முந்தைய தமிழக அரசிடம் தடையில்லாச் சான்றிதழ் கேட்டிருந்தோம். தற்போது, முதல்வா் ச. ஜோசப் விஜய்யிடமும் கோரிக்கை வைத்துள்ளோம்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்று வரும் நான்குவழிச் சாலைப் பணிகள் வரும் டிசம்பா் மாதத்துக்குள் நிறைவு பெறும் என்றாா்அவா்.

தாரகை கத்பட் எம்எல்ஏ, முன்னாள் மாவட்டத் தலைவா்கள் நவீன்குமாா், ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version