பள்ளத்தாக்கில் விழுந்த தனியார் பேருந்து: ஆந்திராவில் 9 சுற்றுலா பயணிகள் உயிரிழப்பு

0
23

ஆந்​தி​ரா​வில் தனி​யார் சுற்​றுலா பேருந்து மலைச்​சரி​வில் விழுந்து விபத்​துக்​குள்​ளான​தில் 9 சுற்​றுலா பயணி​கள் பரி​தாப​மாக உயி​ரிழந்​தனர்.

ஆந்​திர மாநிலம், சித்​தூர் மாவட்​டத்​தில் இருந்து கடந்த 6-ம் தேதி 33 பயணி​கள் ஓட்​டுனர், உதவி​யாளர் என மொத்​தம் 35 பேர் தனி​யார் பேருந்​தில் சுற்​றுலா புறப்​பட்​டனர். இவர்​கள் ஆந்​தி​ரா​வின் முக்​கிய இடங்​களை சுற்​றிப் பார்த்​தனர். இந்​நிலை​யில், வியாழக்​கிழமை இரவு அன்​னவரம் சத்​ய​நா​ராயண சுவாமியை தரிசித்து விட்​டு, அங்​கிருந்து பத்​ராச்​சலம் ​ராமரை தரிசிக்க பேருந்​தில் அனை​வரும் சென்று கொண்​டிருந்​தனர்.

அப்​போது, நேற்று அதி​காலை சுமார் 4 மணி​யள​வில், சிந்​தூரு – மாரேடுமில்லி மலைப்​பகு​தி​யில் பேருந்து வேக​மாக சென்ற போது, ஒரு வளை​வில் திடீரென பிரேக் பிடிக்​காமல் பள்​ளத்​தாக்​கில் கவிழ்ந்து விபத்​துக்​குள்​ளானது. இந்த விபத்​தில் பேருந்​தில் பயணம் செய்த நாகேஸ்வர ராவ், சைலஜா ராணி, சியாமளா, சுனந்​தா, சிவசங்​கர், மது, கலா, உமா ரெட்​டி, கிருஷ்ணகு​மாரி ஆகிய 9 பேர் பரி​தாப​மாக உயி​ரிழந்​தனர். மேலும் 20-க்​கும் மேற்​பட்​டோர் படு​கா​யங்​களு​டன் உயிர் தப்​பினர்.

தகவல் அறிந்​ததும் சம்பவ இடத்​துக்கு 3 ஆம்​புலன்​ஸ்​கள், 5 வாக​னங்​களில் போலீஸார் விரைந்து சென்​று, மீட்பு பணி​களில் ஈடு​பட்​டனர். காயமடைந்​தவர்​களை அரசு மருத்​து​வ​மனை​களில் சிகிச்​சைக்​காக அனு​ம​தித்​தனர். சிந்​தூரு போலீ​ஸார் வழக்கு பதிந்து விசா​ரணை நடத்​தினர். அப்​போது, ஓட்​டுனரின் அலட்​சி​ய​மான, அதிவேக பயணமே விபத்​துக்கு காரணம் என முதல்​கட்ட விசா​ரணை​யில் தெரிய வந்​துள்​ளது.

தகவல் அறிந்து குடியரசு தலை​வர் திர​வுபதி முர்​மு, பிரதமர் மோடி, ஆந்​திர முதல்​வர் சந்​திர​பாபு, துணை முதல்​வர் பவன் கல்​யாண், அமைச்​சர் லோகேஷ் ஆகியோர் ஆழ்ந்த இரங்​கல் தெரி​வித்​தனர். இறந்​தவர்​களின் குடும்​பத்​துக்கு தலா ரூ.2 லட்​ச​மும், காயமடைந்​தோருக்கு தலா ரூ.50 ஆயிர​மும் பிரதமரின் நிவாரண நிதி​யின் கீழ் வழங்​கு​வ​தாக அறிவிக்​கப்​பட்​டுள்​ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here