சர்வதேச அரசியல் களத்தில் யாருக்கும் அடிபணியாத ஒரு சுயசார்பு சக்தியாக ‘இந்தியா’ உருவெடுத்துள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பின் கணிக்க முடியாத வணிகக் கட்டுப்பாடுகளும், வரி கெடுபிடிகளும் சமீபகாலமாக அதிகரித்துள்ளன. உலக வர்த்தகத்தில் அமெரிக்காவின் இந்தத் தன்னிச்சையான வரி கெடுபிடிகள், இந்திய ஏற்றுமதியாளர்களுக்குப் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளன.
இந்த நிதி நிலையற்ற தன்மையைக் குறைக்க, இந்தியப் பொருளாதாரம் தனது ஏற்றுமதிச் சந்தைகளைப் பன்முகப்படுத்தத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, அதிபர் ட்ரம்ப்பின் ‘அமெரிக்க முதன்மை’ கொள்கை ஏற்படுத்திய அதிர்வுகளால், பிரதமர் நரேந்திர மோடி ‘ஹெட்ஜிங்’ (Hedging) எனப்படும் ‘ஆபத்தைக் குறைக்கும் யுத்தி’யைக் கையாளத் தொடங்கியுள்ளார் என்று அமெரிக்காவில் இருந்து வெளிவரும் சர்வதேச நாளேடான ‘தி நியூயார்க் டைம்ஸ்’ சிறப்பு செய்திக் கட்டுரை வெளியிட்டுள்ளது.
