மணிப்பூரில் குடியரசுத் தலைவர் சுற்றுப் பயணம்

0
10

குடியரசுத் தலை​வர் திர​வுபதி முர்மு இரண்டு நாள் சுற்​றுப் பயணமாக நேற்று மணிப்பூர் சென்றார். இம்​பால் விமான நிலையம் சென்றடைந்த அவரை ஆளுநர் அஜய் குமார் பல்லா வரவேற்​றார்.

இதையடுத்து அவர் லோக் பவனுக்கு புறப்​பட்​டார். 2022 ஜூலை​யில் குடியரசுத் தலை​வ​ராக முர்மு பொறுப்​பேற்​றுக் கொண்ட பிறகு அவர் மணிப்​பூருக்கு வருகை தரு​வது இதுவே முதல்​முறை.

இந்த சுற்​றுப்​பயணத்​தின்​போது, மணிப்​பூரின் பெண் சுதந்​திரப் போ​ராட்ட வீரர்​களுக்கு அஞ்​சலி செலுத்​தி, சேனாபதி மாவட்​டத்​துக்கு பயணம் செய்ய உள்​ளார். அங்கு அவர் ஒரு பொதுக்​கூட்​டத்​தில் உரை​யாற்ற உள்​ளார். மணிப்​பூரில் பல்​வேறு வளர்ச்சி திட்​டப் பணி​களை​யும் குடியரசுத் தலை​வர் தொடங்கி வைக்க உள்​ளார்.

மைதேயி மற்​றும் குகி சமூகங்​களுக்கு இடையே ஏற்​பட்ட கடும் மோதல் காரண​மாக இந்த ஆண்டு பிப்​ர​வரி​யில் மாநில அரசு கலைக்​கப்​பட்டு அங்கு குடியரசுத் தலை​வர் ஆட்சி அமல்​படுத்​தப்​பட்​டது. ஆயிரக்​கணக்​கான பாது​காப்​புப் படை​யினர் நிறுத்​தப்​பட்ட போ​தி​லும் அவ்​வப்​போது வன்​முறை சம்​பவங்​களின் நிகழ்வு வாடிக்​கை​யாக உள்​ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here