மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் குறைவு: ஆர்எஸ்எஸ் தலைவர் எச்சரிக்கை

0
178

 மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் ஆர்எஸ்எஸ் சார்பில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் அந்த அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் பேசியதாவது: சமூகத்தின் அடிப்படையான ஒரு அங்கம்தான் குடும்பம். ஒவ்வொரு குடும்பமும் ஒரு குழு. இந்நிலையில், மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் குறைந்து வருவது கவலை அளிக்கிறது. மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 2.1-க்கு கீழ் சென்றால் சமூகம் தானாகவே அழிந்துவிடும் என லக்சன்க்யா சாஸ்திரம் கூறுகிறது. இந்திய மக்கள் தொகை கொள்கை 1998-ல் அறிமுகம் செய்யப்​பட்டது. அதிலும் மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 2.1-க்கு கீழ் செல்லக்​கூடாது என கூறப்​பட்​டுள்ளது. சமூகம் நீடித்​திருக்க இந்த விகிதம் குறையக்கூடாது. இவ்வாறு அவர் தெரிவித்​தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here