குளச்சல் அருகே செம்பொன்விளை பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் (69) கேபிள் தொழில் நடத்தி வருகிறார். நேற்று மாலை இவர் திக்கணங்கோடு – குளச்சல் சாலையில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். கட்டபுளி என்ற பகுதியில் சென்றபோது சகாயநகரை சேர்ந்த டேவிட் (22) என்பவர் ஓட்டி வந்த பைக் செல்வராஜ் பைக் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட செல்வராஜ் படுகாயம் அடைந்தார். அதேபோல் கீழே விழுந்த டேவிட்டும் அவரது பைக்கின் பின்னால் இருந்த ஜோஷி (19) ஆகியோரும் காயம் அடைந்தனர். இதில் டேவிட் ஜோஷி இருவரும் குளச்சல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். படுகாயம் அடைந்த செல்வராஜ் நாகர்கோவில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவம் குறித்து குளச்சல் போலீசார் டேவிட் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Latest article
குமரியில் மோட்டார் சைக்கிள்கள் திருடிய வாலிபர் கைது.
நாகர்கோவில் மணிமேடை பகுதியில் வடசேரி போலீசார் ரோந்து சென்றபோது சந்தேகத்திற்கிடமான வாலிபர் ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் மார்த்தாண்டத்தைச் சேர்ந்த பிரவீன் (34) என்பதும், குமரியில் பல்வேறு இடங்களில் மோட்டார்...
குளச்சல்: பெண்களிடம் சில்மிஷம் செய்த அரசு பஸ் டிரைவர் கைது
குளச்சலில் உள்ள அரசு பஸ் நிலையத்தில் தூங்கிக் கொண்டிருந்த பெண்களிடம் சில்மிஷம் செய்த அரசு பஸ் டிரைவர் ஜவகர் (55) கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் குறித்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில்...
பாலப்பள்ளம்: ஐஆர்இஎல் சார்பில் இலவச கண் மருத்துவ முகாம்
மணவாளக்குறிச்சியில் உள்ள ஐஆர்இஎல் நிறுவனம் சார்பில், பாலப்பள்ளம் பேரூராட்சிக்குட்பட்ட கடமாங்குழி சிஎஸ்ஐ சமுதாய நலக்கூடத்தில் நேற்று, 6-ம் தேதி, அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து முழுமையான இலவச கண் பரிசோதனை மருத்துவ முகாம்...














