வங்கதேச மீனவர்கள் மீது காட்டுவதைப் போன்று இந்திய மீனவர்கள் மீதும் பிரதமர் இரக்கம் காட்ட வலியுறுத்தல்

0
52

பிரதமர் மோடி வங்​கதேச மீனவர்கள் மீது காட்​டும் இரக்கத்தை இந்​திய மீனவர்​களின் மீதும் காட்ட வேண்​டும் என்​று, அகில இந்​திய மீனவர் காங்​கிரஸ் தலை​வர் ஆம்​ஸ்ட்​ராங் பெர்​னாண்டோ வலி​யுறுத்​தி​யுள்​ளார்.

இது தொடர்​பாக, அவர் வெளி​யிட்ட அறிக்​கை: இந்​திய மீனவர்கள் இலங்கை கடற்​படை​யால் தொடர்ந்​து கைது செய்​யப்​பட்​டு, அவர்​களின் மீன்​ பிடி படகு​கள் பறி​முதல் செய்​யப்​பட்​டு, சிறை​யில் அடைத்து கடுமை​யான தண்​டனைக்கு உள்​ளாக்​கப்​படு​கின்​றனர். அத்​துடன், ரூ.1 கோடி வரை அபராத​மும் விதிக்​கப்​படு​கிறது.

இதை தடுக்​க​வும், மீனவர்​களை மீட்​க​வும் எவ்​வித நடவடிக்​கை​யும் எடுக்​காமல், அலட்​சிய போக்கை கடைபிடித்து வரும் பிரதமர் மோடி அரசு, இந்​திய எல்லை தாண்டி மீன் பிடித்த வங்​கதேச மீனவர்கள் 128 பேரை மனி​தாபி​மான அடிப்​படை​யில் விடு​தலை செய்​வ​தாக அறி​வித்​துள்​ளது கடத்த ஆண்​டில் மட்​டும் 135 இந்​திய மீவைர்​கள் இலங்கை கடற்​படை​யால் கைது செய்​யப்​பட்​டு, 41 விசை படகு​கள் பறி​முதல் செய்​யப்​பட்​டுள்​ளன.

இந்த ஆண்டு தொடங்​கியது முதலே இலங்கை கடற்​படை இது​வரை 16 இந்​திய மீனவர்​களை கைது செய்​தும், 4 விசைப் படகு​களை கைப்​பற்​றி​யும் அராஜகம் செய்​துள்​ளது. தொடர்ந்து அலட்​சி​ய​மாக செயல்​பட்டு வரும் மத்​திய வெளி​யுறவுத் துறை​யும், அதன் வெளி​யுறவுக் கொள்​கை​யும் தோல்​வியடைந்​துள்​ளது.

காங்​கிரஸ் கட்சி மத்​தி​யில் ஆட்​சி​யில் இருந்த போது மீட்பு நடவடிக்​கைகள் மிக​வும் துரித​மாக எடுக்​கப்​பட்​டன. பிரதமர் மோடி வங்​கதேச மீனவர்கள் மீது காட்​டும் இரக்கத்தை நம் இந்​திய மீனவர்​களின் மீதும் காட்ட வேண்​டும்.

இனிமேல் இந்​திய மீனவர் ஒரு​வர் கூட இலங்கை கடற்​படை​யால் கைது செய்​யப்​ப​டாத வண்​ணம் கடுமை​யான சட்ட நடவடிக்​கைகளை மேற்​கொள்ள வேண்​டும். இவ்​வாறு அறிக்​கை​யில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here