தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ) கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு (எம்பி) பிரதமர் நரேந்திர மோடி நேற்று தனது இல்லத்தில் இரவு விருந்து அளித்தார்.
டெல்லியில் எண் 7, லோக் கல்யாண் மார்க்கில் உள்ள பிரதமர் மோடியின் இல்லத்தில் விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. பிஹாரில் நடைபெற்ற தேர்தலில் என்டிஏ கூட்டணி அமோக வெற்றி பெற்றதைக் கொண்டாடும் விதமாக இந்த விருந்து நடைபெற்றது.
பொறுப்புணர்வுடன் மக்களுக்கு பணியாற்றுமாறு விருந்தில் பங்கேற்ற எம்.பி.க்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை வழங்கினார். 243 உறுப்பினர்களைக் காண்ட பிஹார் சட்டப்பேரவையில் என்டிஏ கூட்டணி 202 இடங்களை கைப்பற்றி வெற்றி பெற்றது.







