“எனது கட்சி சிவசேனாவை பிரதமர் மோடி உடைத்தார்” – உத்தவ் தாக்கரே குற்றச்சாட்டு

0
17

கடந்த 2022 ஜூன் மாதம் சிவசேனா கட்சி இரண்​டாக உடைந்​தது. தற்​போது உத்​தவ் தாக்​கரே தலை​மை​யில் ஓர் அணியும், மகா​ராஷ்டிர துணை முதல்​வர் ஏக்​நாத் ஷிண்டே தலைமையில் மற்​றொரு அணி​யும் செயல்​படு​கின்​றன.

இதுதொடர்​பாக உத்​தவ் தாக்​கரே பிடிஐ செய்தி நிறு​வனத்​துக்கு அளித்த பேட்​டி​யில் கூறி​யிருப்​ப​தாவது: “கடந்த 2014, 2019ம் ஆண்​டு​களில் நடை​பெற்ற மக்​கள​வைத் தேர்​தல்​களில் பிரதமர் நரேந்​திர மோடிக்​காக நான் தீவிர பிரச்​சா​ரம் செய்​தேன். இரு​முறை மோடிக்கு உதவி செய்​த​ போ​தி​லும் அவர் எனது கட்​சியை உடைத்தார். அவர் பிரதம​ராக வேண்​டும் என்று நான் வலியுறுத்தினேன்.

ஆனால் நான் அழிக்​கப்பட வேண்​டும் என்று அவர் கூறுகிறார். மகா​ராஷ்டி​ரா​வில் இருந்து மும்​பையை பிரிக்க வேண்​டும் என்​பது பாஜக​வின் பழைய கனவு ஆகும். சிவசேனா நிறு​வனர் பால் தாக்​கரே கடந்த 2012-ம் ஆண்டு வரை வாழ்ந்​தார். அவர் வாழ்ந்த காலத்​தில் பாஜக வளைந்து நின்​றது. தற்​போது அவர் உயிரோடு இல்​லாத சூழலில் காகித அளவில் சிவசே​னாவை அழித்துவிட்டனர்.

ஆனால் மக்​களின் மனங்​களில் இருந்து சிவசே​னாவை அழிக்க முடி​யாது. அரசி​யல் நாகரி​கத்தை மீறி பாஜக செயல்​படு​கிறது. 20 ஆண்​டு​களுக்கு பிறகு நானும் ராஜ் தாக்​கரே​வும் ஒன்​றிணைந்​துள்​ளோம். இனிமேல் நாங்​கள் ஒரு​ போதும் பிரிய மாட்​டோம். இவ்வாறு உத்​தவ்​ தாக்​கரே தெரி​வித்​துள்​ளார்​.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here