செல்லப் பிராணிகளுக்கு உரிமம் வழங்கும் முகாம் தொடக்கம்: 8 இடங்களில் நடைபெறுகிறது

0
13

மாநக​ராட்சி சார்​பில் செல்​லப் பிராணி​களுக்கு உரிமம் பெறு​வதற்​கான சிறப்பு முகாம் நேற்று தொடங்​கியது. 8 இடங்​களில் இன்​றும், நாளை​யும் நடை​பெற உள்​ளது.

இது தொடர்​பாக சென்னை மாநக​ராட்சி வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: மாநக​ராட்சி சார்​பில், திருவிக நகர், புளியந்​தோப்​பு, லாயிட்ஸ் காலனி, நுங்​கம்​பாக்​கம், கண்​ணம்​மாபேட்​டை, மீனம்​பாக்​கம் ஆகிய செல்​லப் பிராணி சிகிச்சை மையங்​கள், சோழிங்​கநல்​லூரில் உள்ள நாய் இனக்​கட்​டுப்​பாட்டு மையம் ஆகிய​வற்​றில் கடந்த அக்​.8-ம் தேதி​முதல் செல்​லப் பிராணி​களுக்கு வெறிநோய் தடுப்​பூசி செலுத்​துதல், மைக்​ரோசிப் பொருத்​துதல் மற்​றும் உரிமம் வழங்​கும் பணி​கள் மேற்​கொள்​ளப்​பட்டு வரு​கின்​றன.

உரிமம் வழங்​கு​வதற்​கான காலக்​கெடு டிச.14 வரை நீட்​டிக்​கப்​பட்​டுள்​ளது. இது​வரை 98,523 செல்​லப் பிராணி​களின் விவரங்​கள் பதிவு செய்​யப்​பட்​டு, 54,576 செல்​லப் பிராணி​களுக்கு உரிமம் வழங்​கப்​பட்​டுள்​ளது. இந்​நிலை​யில் கூடு​தலாக நேற்று 8 இடங்​களில் சிறப்பு முகாம்​கள் தொடங்​கப்​பட்​டன. இந்த முகாம்​கள் இன்​றும், நாளை​யும் தொடர்ந்து நடை​பெற உள்​ளன. இவை தின​மும் காலை 9 மணி​முதல் மாலை 5 மணிவரை நடை​பெறும்.

இதன்​படி, மணலி மண்​டலம், 22-வது வார்​டு, சின்ன சேக்​காட்​டில் உள்ள மாநக​ராட்சி சமு​தாயக்​கூடம், மாதவரம் மண்​டலம், 32-வது வார்​டு, சூரப்​பட்​டில் உள்ள மாநக​ராட்சி சமு​தாயக்​கூடம், தண்​டை​யார்​பேட்டை மண்​டலம், 48-வது வார்​டு, பழைய வண்​ணாரப்​பேட்​டை​யில் உள்ள மாநக​ராட்சி சமு​தாயக்​கூடம், அம்​பத்​தூர் மண்​டலம், 91-வது வார்​டு, டன்​லப் மைதானம், அண்​ணாநகர் மண்​டலம், 100-வது வார்​டு, கீழ்ப்​பாக்​கம் மாநக​ராட்சி சமு​தாயக்​கூடம், வளசர​வாக்​கம் மண்​டலம், 147-வது வார்​டு, ஆலப்​பாக்​கத்​தில் உள்ள கவுன்​சிலர் அலு​வல​கம், அடை​யாறு மண்​டலம், 175-வது வார்​டு, வேளச்​சேரி மேற்​கில் உள்ள மாநக​ராட்சி சமு​தாயக்​கூடம், பெருங்​குடி மண்​டலம், 188-வது வார்​டு, மடிப்​பாக்​கத்​தில் உள்ள மாநக​ராட்சி சமு​தாயக்​கூடம் ஆகிய 8 இடங்​களில் நடை​பெற உள்​ளன. இவ்​வாறு செய்​திக்​குறிப்​பில் கூறப்​பட்​டுள்​ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here