பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் விஜய் ஹசாரே கோப்பை போட்டிக்கு அனுமதி மறுப்பு!

0
14

நாளை (டிசம்பர் 24) பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெறவிருந்த விஜய் ஹசாரே கோப்பை போட்டிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக பெங்களூரு நகர காவல் ஆணையர் சீமந்த் குமார் சிங் தெரிவித்தார்.

பெங்​களூரு சின்​ன​சாமி கிரிக்​கெட் மைதானத்​தில் கடந்த ஜூன் 4-ம் தேதி நடை​பெற்ற ராயல் சாலஞ்​சர்ஸ் பெங்களூரு அணி​யின் வெற்​றிக் கொண்​டாட்​டத்​தின் போது ஏற்​பட்ட நெரிசலில் 11 பேர் இறந்​தனர். இதன் பின்னர் சின்​ன​சாமி கிரிக்​கெட் மைதானத்​தில் போட்​டிகள் நடத்த தடை​வி​திக்​கப்​பட்​டது.

இந்​நிலை​யில், சின்​ன​சாமி மைதானத்​தில் மீண்​டும் கிரிக்கெட் போட்​டிகளை நடத்​து​வது தொடர்​பாக, விதான் சவு​தா​வில் கர்நாடக கிரிக்​கெட் சங்க நிர்​வாகி​கள் மற்​றும் காவல்​துறை அதிகாரி​களு​டன் கர்​நாடக உள்​துறை அமைச்​சர் ஜி.பரமேஸ்​வரா ஆலோ​சனை நடத்​தி​னார். இதில் விஜய் ஹசாரே டிராபி போட்டியை பார்​வை​யாளர்களை அனு​ம​திக்​காமல் மைதானத்தில் நடத்த கர்​நாடக மாநில கிரிக்​கெட் சங்​கம் சார்​பில் அனு​மதி கேட்​கப்பட்​டது.

கூட்​டத்​துக்கு பின்​னர் அமைச்​சர் ஜி.பரமேஸ்​வரா கூறும்​போது, ”விஜய் ஹசாரே போட்​டியை காண பார்​வை​யாளர்களை அனு​ம​திக்​காமல் பெங்​களூரு சின்​ன​சாமி மைதானத்​தில் நடத்த அனு​மதி கேட்கப்பட்​டுள்​ளது. மைதானத்​தில் மீண்​டும் கிரிக்​கெட் போட்டிகளை நடத்த அனு​மதி வழங்​கு​வது குறித்து ஆராய குழு அமைக்கப்பட்டுள்​ளது.

பெருநகர பெங்​களூரு ஆணை​யத்​தின் கமிஷனர் தலைமையிலான இந்​தக் குழு​வில் காவல் ஆணை​யர், பொதுப்​பணித்​துறை, தீயணைப்பு மற்​றும் சுகா​தா​ரத் துறை அதி​காரி​கள் உள்​ளனர், அவர்​கள் மைதானத்​துக்​குச் சென்று ஆய்வு செய்து கருத்து அறிக்கை வழங்​கு​வார்​கள். அதன் அடிப்​படை​யில் முடிவு எடுக்​கப்​படும்” என்​றார்.

சின்னசாமி மைதானத்தில் கிரிக்கெட் போட்டிகளை நடத்த அனுமதி வழங்குவது குறித்து ஆராய அமைக்கப்பட்டக் குழு திங்கள்கிழமை மைதானத்திற்குச் சென்று ஆய்வு செய்தது. இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பெங்களூரு நகர காவல் ஆணையர் சீமந்த் குமார் சிங், “கிரிக்கெட் போட்டி நடத்த அனுமதி உள்ளதா இல்லையா என்பது குறித்து உங்களிடையே சில குழப்பங்கள் இருக்கலாம். குழப்பம் தேவையில்லை. உங்களுக்குத் தெரிந்தபடி, எங்கள் குழு நேற்று அங்கு சென்றிருந்தது. அந்தக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில், அனுமதி நிராகரிக்கப்பட்டுள்ளது.

உள்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின் பேரில் அந்தக் குழு மைதானத்திற்குச் சென்றது. அந்தத் துறையின் அறிக்கையின்படி, நாளை நடைபெறவிருந்த போட்டிக்கு அனுமதி வழங்கப்படவில்லை. அந்தக் குழு ஒரு விரிவான அறிக்கையை அளித்துள்ளது, ஆனால் தற்போதைக்கு அனுமதி இல்லை” என்றார். தானும் அந்தக் குழுவின் உறுப்பினர்களில் ஒருவர் என்பதால், அறிக்கையின் விவரங்களைப் பகிர சீமந்த் குமார் சிங் மறுத்துவிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here