முதல்வரின் திட்டங்களால் அனைவரும் பயன்பெறுவதை பழனிசாமியால் பொறுக்க முடியவில்லை: அமைச்சர் விமர்சனம்

0
42

மகளிர், அரசு ஊழியர், மாணாக்​கர் என அனை​வரும் முதல்​வரின் திட்​டங்​களால் பயன்​பெறு​வதைப் பார்த்து பழனிசாமியால் பொறுத்​துக் கொள்ள முடிய​வில்லை என்று அமைச்​சர் எஸ்​.எஸ்​.சிவசங்​கர் தெரி​வித்​துள்​ளார்.

இதுகுறித்து அவர் நேற்று வெளி​யிட்ட அறிக்​கை: பழனிசாமி ஆட்​சி​யில் 2019-ம் ஆண்​டிலேயே லேப்​டாப் வழங்​கும் திட்​டத்தை நிறுத்​தி​விட்டு தொடர்ந்து வழங்கி வந்​த​தாக பொய் கூறுகிறார். அதி​முக ஆட்​சி​யில் ரூ.68 கோடி​யில் வாங்​கிய 55 ஆயிரம் லேப்​டாப்​கள் வீணடிக்​கப்​பட்​டதை இந்​தி​யத் தலை​மைக் கணக்​குத் தணிக்கை அறிக்கை (சிஏஜி) வெளிச்​சம் போட்​டுக் காட்​டியது.

பழனி​சாமி ஆட்​சி​யில் நடந்த லேப்​டாப் முறை​கேட்டை அம்​பலப்​படுத்​திய சிஏஜி அறிக்கை 2023 ஏப்​ரலில் சட்​டப்​பேர​வை​யில் தாக்​கல் செய்​யப்​பட்​டது. கடந்த 2017-18-ம் ஆண்டு போட்​டித் தேர்​வுக்​குத் தயா​ரான 12-ம் வகுப்பு மாணவர்​களுக்கு வழங்க எல்​காட் நிறு​வனம் மூலம் 60 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட லேப்​டாப்​கள் கொள்​முதல் செய்​யப்​பட்​டன.

அதில் குறைந்த அளவிலான லேப்டாப்களை மட்​டும் விநி​யோகித்​து​விட்​டு, 55 ஆயிரம் லேப்​டாப்​​களை தேவைப்​படும் மாணவர்​களுக்கு வழங்க எந்த நடவடிக்​கை​யும் எடுக்​காத​தால், அந்த லேப்​டாப்​களின் பேட்​டரி வாரண்டி காலா​வதி ஆகி​விட்​டது. இதனால் ரூ.68.71 கோடி நஷ்டம் ஏற்​பட்​ட​தாக சிஏஜி அறிக்​கை​யில் கூறப்​பட்​டுள்​ளது.

சிஏஜி அறிக்​கை​யின்​படி, பழனிசாமி ஆட்​சி​யில் 2017-18 முதல் 2020–21 வரை 11 மற்​றும் 12-ம் வகுப்​பில் 18.60 லட்​சம் தகு​தி​யான மாணவர்​கள் இருந்​தார்​கள். ஆனால் 20 சதவீத மாணவர்​களுக்கு வழங்​காமல் புறக்​கணித்​தார்​கள். 2017-18-ம் ஆண்​டில் 12-ம் வகுப்பு தேர்​வில் தேர்ச்சி பெற்ற 2.32 லட்​சம் மாணவர்​கள் பள்​ளிப் படிப்பை முடிக்​கும் வரை லேப்​டாப்​களை பெற​வில்​லை.

தற்​போது 20 லட்​சம் கல்​லூரி மாணாக்​கருக்கு லேப்​டாப் வழங்​கும் ‘உல​கம் உங்​கள் கையில்’ திட்​டத்தை முதல்​வர் தொடங்கி வைக்​கிறார். தமிழக மாணவர்​கள் உலகத்​தோடு போட்​டி​யிடும் வகை​யில் ஒவ்​வொரு திட்​ட​மாக வகுத்து வரு​கிறது திமுக அரசு. மகளிர், அரசு ஊழியர், மாணாக்​கர் என ஒவ்​வொரு பிரி​வினரும் முதல்​வரின் திட்​டங்​களால் பயன்​பெறு​வதைப் பார்த்து பழனிசாமியால் பொறுத்​துக் கொள்ள முடிய​வில்​லை. இவ்​வாறு அவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here