பாதுகாப்பு படை சிந்தூர் வைத்ததால் இந்தியாவின் மனைவியாகிவிட்டது பாகிஸ்தான்: ராஜஸ்தான் எம்.பி. கருத்தால் மக்களவையில் சிரிப்பலை

0
95

ஆபரேஷன் சிந்​தூருக்கு பிறகு பாகிஸ்​தான், இந்​தி​யா​வின் மனை​வி​யாகி​விட்​டது என்று ராஜஸ்​தான் எம்பி அனு​மன் பெனி​வால் கூறி​யதை கேட்டு மக்​களவை​யில் சிரிப்​பலை எழுந்​தது. ராஜஸ்​தானின் நாகவூர் பகு​தியை சேர்ந்​தவர் அனு​மன் பெனிவால்.

வழக்​கறிஞ​ரான இவர் கடந்த 2003-ல் இந்​திய தேசிய லோக் தளம் கட்​சி​யில் இணைந்​தார். கடந்த 2004-ம் ஆண்​டில் பாஜக​வில் ஐக்கிய​மா​னார். கருத்து வேறு​பாடு காரண​மாக 2013-ல் பாஜக​வில் இருந்து வெளி​யேறி 2018-ல் ராஷ்டிரிய லோக்​தந்​ரிக் என்ற கட்​சியை தொடங்​கி​னார்.

ராஜஸ்​தானின் நாகவூர் தொகுதி எம்​பி​யான இவர், மக்​களவை​யில் நேற்று ஆபரேஷன் சிந்​தூர் தொடர்​பான விவாதத்​தில் பங்கேற்றார். அவர் பேசி​ய​தாவது: சிந்​தூர் என்​றால் குங்​குமம் என்று அர்த்​தம். ஆபரேஷன் சிந்​தூர் ராணுவ நடவடிக்​கை​யின்​போது பாகிஸ்​தானின் நெற்​றி​யில் பாதுகாப்பு படை குங்​குமத்​தால் தில​கமிட்டு உள்​ளது.

இந்து பாரம்​பரி​யத்​தின்​படி ஒரு ஆண், ஒரு பெண்​ணின் நெற்​றி​யில் குங்​குமத்​தால் தில​கமிட்​டால் இரு​வரும் கணவன், மனைவி ஆகி விடு​வார்​கள். இந்த பாரம்​பரி​யத்​தின்​படி தற்​போது பாகிஸ்​தான், இந்​தி​யா​வின் மனை​வி​யாகி​விட்​டது. புது​மனை​வியை இந்தியாவுக்கு அழைத்து வர வேண்​டும். இவ்​வாறு அனு​மன் பெனி​வால் பேசி​னார்.

ஆபரேஷன் சிந்​தூர் தொடர்​பான விவாதத்​தில் ஆளும் கட்சி எம்​பிக்​கள், எதிர்க்​கட்சி எம்​பிக்​கள் கார​சா​ர​மாக பேசி வரு​கின்​றனர். அவர்​களுக்கு நடுவே அனு​மன் பெனி​வால் நகைச்​சுவையோடு பேசி கலகலப்பை ஏற்​படுத்​தி​னார். அவரது கருத்​தால் மக்​களவை முழு​வதும்​ சிரிப்​பலை எழுந்​தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here