Home கன்னியாகுமரி செய்திகள் பத்மநாபபுரம்: பெண் கொலை ; முன்னாள் ராணுவ வீரருக்கு ஆயுள்

பத்மநாபபுரம்: பெண் கொலை ; முன்னாள் ராணுவ வீரருக்கு ஆயுள்

0

முளகுமூடு பகுதியைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் மெர்லின் ராஜ் (50), பணியில் ஒழுங்கீனம் காரணமாக 2014-ல் ராணுவத்தில் இருந்து நீக்கப்பட்டவர். இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. கடந்த 7.2.2021 அன்று மேரி ஜெயா அமுதா என்ற பெண்ணைப் பின்தொடர்ந்து, அவரது கழுத்தில் இருந்த சங்கிலியைப் பறித்து, அவரை குளத்தில் மூழ்கடித்து கொலை செய்தார். இந்த வழக்கு பத்மநாபபுரம் நீதிமன்றத்தில் நீதிபதி பரமசிவதாஸ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. நேற்று, நீதிபதி மெர்லின் ராஜிக்கு ஆயுள் தண்டனை மற்றும் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version