குடியிருப்பு பகுதியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு: திருவேற்காடு நகராட்சி ஆணையர் ஆய்வு செய்ய ஐகோர்ட் உத்தரவு

0
168

 ​மாசுக்​கட்​டுப்​பாட்டு வாரிய விதி​களை மீறி குடி​யிருப்​புப் பகு​தி​யில் கழி​வுநீர் சுத்​தி​கரிப்பு நிலை​யம் அமைக்க எதிர்ப்பு தெரி​வித்த வழக்​கில், திரு​வேற்​காடு நகராட்சி ஆணை​யர் சம்​பந்​தப்​பட்ட இடத்தை ஆய்வு செய்ய சென்னை உயர் நீதி​மன்​றம் உத்தர​விட்​டுள்​ளது.

திரு​வேற்​காடு கோலடி கிராமத்​தில் கழி​வுநீர் சுத்​தி​கரிப்பு நிலை​யம் அமைக்க எதிர்ப்பு தெரி​வித்து வழக்​கறிஞர் எம்​.​காமேஷ் என்பவர் சென்னை உயர் நீதி​மன்றத்​தில் பொது நல வழக்கு தாக்​கல் செய்​திருந்​தார். வழக்கு தலைமை நீதிபதி எம்​.எம்​.வஸ்​த​வா, நீதிபதி சுந்​தர் மோகன் அடங்​கிய அமர்வு முன் விசா​ரணைக்கு வந்​தது.

அப்​போது மனு​தா​ரர் தரப்​பில், “கோ​யில், குடி​யிருப்​பு​கள் மற்​றும் பள்​ளி​கள் அமைந்​துள்ள பகு​தியி​லிருந்து 500 மீட்​டருக்கு அப்​பாலும், நீர் நிலைகளுக்கு 250 மீட்​டர் தொலை​விலும் இருக்​கும் வகை​யில் மட்​டுமே கழி​வுநீர் சுத்​தி​கரிப்பு நிலை​யம் அமைக்க வேண்​டும் என தமிழக மாசு கட்​டுப்​பாட்டு வாரிய விதி உள்​ளது. அந்த விதி​களைப் பின்​பற்​றாமல், கழி​வுநீர் சுத்​தி​கரிப்பு நிலை​யம் அமைக்​கத் திட்ட​மிடப்​பட்​டுள்​ளது” என வாதிடப்​பட்​டது.

தொடர்ந்து நீதிப​தி​கள் பிறப்​பித்த உத்​தர​வில் கூறி​யிருப்​ப​தாவது: மனு​தா​ரர் புகாரில் சுட்​டிக்​காட்​டியபடி, தமிழக மாசுக் கட்​டுப்​பாட்டு வாரி​யத்​தால் வெளி​யிடப்​பட்ட வழி​காட்​டு​தல்​களின் அடிப்​படை​யில், கழி​வுநீர் சுத்​தி​கரிப்பு நிலை​யம் அமைக்​கப்​படு​கிறதா என்​பது குறித்து திரு​வேற்​காடு நகராட்சி ஆணை​யர் ஆய்வு செய்ய வேண்​டும்.

இந்த ஆய்வை 6 வாரங்​களுக்​குள் முடிக்க வேண்​டும். ஆய்வு முடிவு​கள் குறித்து மனு​தா​ரருக்கு தெரியப்​படுத்த வேண்​டும். ஆய்வு முடி​வில் மனு​தா​ரருக்கு திருப்தி இல்லை என்​றால் நீதி​மன்​றத்தை அணுகலாம். இவ்​வாறு உத்​தர​விட்டு வழக்​கை முடித்​து வைத்​தனர்​.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here