காஞ்சியில் தனியார் மருத்து ஆலைக்கு ‘நோட்டீஸ்’ – வெளிமாநில குழந்தைகள் உயிரிழந்த விவகாரம்

0
17

வெளி​மாநிலக் குழந்​தைகள் உயி​ரிழந்த விவ​காரம் தொடர்​பாக சுங்​கு​வார் சத்​திரம் மருந்து ஆலைக்கு நோட்​டீஸ் அனுப்​பப்​பட்​டுள்​ளது. காஞ்​சிபுரம் மாவட்​டம், ஸ்ரீபெரும்​புதூர் அருகே சுங்​கு​வார்​சத்​திரத்​தில் இயங்கி வரும் தனி​யார் மருந்து உற்பத்தி ஆலையில் தயாரிக்​கப்​பட்ட இரு​மல் மருந்தை உட்​கொண்​ட​தால் வெளி​மாநிலக் குழந்​தைகள் உயி​ரிழந்​த​தாகக் குற்​றச்​சாட்​டு​கள் எழுந்த நிலை​யில், இந்த நிறு​வனத்​தின் செயல்​பாடு​கள் குறித்து விளக்​கம் கேட்டு வாயி​லில் நோட்​டீஸ் ஒட்​டப்​பட்​டது. ஆலை பூட்​டப்​பட்​டிருந்​த​தால் ஆலைக் கதவில் ஒட்​டப்​பட்​டது.

இந்த ஆலை​யில் தயாரிக்​கப்பட்ட கோல்ட்​ரிப் இரு​மல் மருந்தை உட்​கொண்ட ராஜஸ்​தான், மத்​தி​யப் பிரதேச மாநிலங்​களைச் சேர்ந்த பல குழந்தைகளுக்கு அடுத்​தடுத்து உடல் நலக் குறைவு ஏற்​பட்​டதோடு, 10-க்​கும் மேற்​பட்ட குழந்​தைகள் உயி​ரிழந்தனர்.

குழந்​தைகளின் உயி​ரிழப்​பு​களுக்கு இந்த இரு​மல் மருந்​து ​தான் காரணம் என்று ராஜஸ்​தான் மற்​றும் மத்​தி​யப் பிரதேச மாநிலங்​களில் புகார்​கள் எழுந்​தன. இதனைத் தொடர்ந்​து, தங்​கள் மாநிலங்​களில் ஏற்​பட்ட உயி​ரிழப்​பு​கள் குறித்து தீவிர நடவடிக்கை எடுக்​கக் கோரி சம்​பந்​தப்​பட்ட மாநில அரசுகள் தமிழக அரசை வலி​யுறுத்​தின.

இந்த புகாரின் அடிப்​படை​யில், கடந்த 3-ம் தேதி, ராஜஸ்​தான், மத்​திய பிரதேச மாநிலங்​களின் மருந்து கட்​டுப்​பாட்டு அதி​காரி​கள் சுங்​கு​வார்​சத்​திரத்​தில் உள்ள தனி​யார் மருந்து உற்​பத்தி ஆலைக்கு வந்து திடீர் ஆய்வு மேற்​கொண்​டனர். ஆலை வளாகம் முழு​வதும் ஆய்வு செய்​யப்​பட்ட நிலை​யில், மருந்து தயாரிப்​புக்​குப் பயன்​படுத்​தப்​பட்ட மூலப்​பொருள்​கள், தயாரிக்​கப்​பட்ட மருந்​தின் மாதிரி​களைப் பறி​முதல் செய்​தனர்.

இந்​நிலை​யில், இந்த முக்​கிய விவ​காரம் குறித்து ஆலை நிர்​வாகத்​திடம் விளக்​கம் கோர, காஞ்​சிபுரம் மண்டல மருந்து கட்​டுப்​பாட்​டுத் துறை அதி​காரி மணிமேகலை நடவடிக்கை எடுத்​துள்​ளார். அவர் இந்த ஆலைக்​குச் சென்​ற​போது ஆலை பூட்​டப்​படிருந்​த​தால், இந்த நிறு​வனத்​தின் செயல்​பாடு​கள் குறித்து விளக்​கம் கோரும் நோட்​டீஸை ஆலை​யின் வாயி​லில் ஒட்​டி​னார்.

தயாரிக்​கப்​பட்ட மருந்​தில் ஏதேனும் தரக் குறை​பாடு (Sub-standard quality) இருந்​ததா அல்​லது மருந்து தயாரிப்பு விதி​முறை​கள் மீறப்​பட்​டதா என்​பது தொடர்​பாக​வும், மருந்து தயாரிப்​பின்​போது பின்​பற்​றப்​பட்ட தரக் கட்​டுப்​பாடு நடை​முறை​கள், மூலப்​பொருள்​கள் கொள்​முதல் ஆவணங்​கள், சோதனை அறிக்​கைகள் உள்​ளிட்ட அனைத்து தொடர்​புடைய ஆவணங்​களை​யும் குறிப்​பிட்ட காலக்​கெடு​வுக்​குள் சமர்ப்​பிக்க வேண்​டும் என்று அந்த நோட்​டீஸில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

மேலும், இந்​தச் சம்​பவம் குறித்​துக் கேட்​கப்​பட்ட விளக்​கத்தை திருப்​தி​கர​மாக அளிக்​கத் தவறி​னால், மருந்து மற்​றும் அழகு சாதனப் பொருள் சட்​டம் மற்​றும் விதி​களின்​படி, ஆலை​யின் மீது சட்​டரீ​தி​யான கடுமை​யான நடவடிக்கை எடுக்​கப்​படும் என்று எச்​சரிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here