“செங்கோட்டையனுக்கு யாரும் சொல்லிக் கொடுக்க வேண்டியதில்லை!” – முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பேட்டி

0
234

“என்னை சோதிக்காதீர்கள்” என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் வேதனைக் குரல் எழுப்பி இருக்கும் நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சரான ஓ.எஸ்.மணியனிடம் செங்கோட்டையன் விவகாரம் குறித்து பேசினோம்.

செங்கோட்டையன் அதிமுக தலைமை மீது அதிருப்தியில் இருப்பதாக தெரிகிறதே? – அண்ணன் செங்​கோட்​டையன் ஆதங்​கத்​தில் இருக்​கிறார், வருத்​தத்​தில் இருக்​கிறார், கோபத்​தில் இருக்​கிறார் என்ப​தற்​கெல்​லாம் அவரே நேற்று முன்​தினம் தெளிவாக பதில் கூறி விட்​டார். “இந்த இயக்கம் நன்றாக இருக்க வேண்​டும், வலுவாக இருக்க வேண்​டும் என்பது​தான் எனது எண்ணம்” என்று அவர் தெளி​வாகச் சொன்ன பிறகும் அதைப் பற்றி பேசுவதற்கு வேறு எதுவும் இல்லை.

என்னை சோதிக்காதீர்கள் என்கிறாரே… யாரைச் சொல்கிறார்? – என்னிட​மிருந்து எதையாவது வார்த்​தைகளை வாங்கி எதையாவது செய்​து​விடலாம் என்று நினைக்​காதீர்​கள், அப்படி​யெல்​லாம் என்னை சோதிக்​காதீர்கள் என்கிற அர்த்​தத்​தில் தான் அப்படிச் சொன்​னார்​.

விழா மேடையில் எம்ஜிஆர் ஜெயலலிதா படங்கள் இல்லையே என்று அவர் கேட்டது நியாயம் தானே? – தன்னிடம் அழைப்பு கொடுக்க வந்த விவசாய சங்க நிர்வாகிகளிடம் தானே அதை கூறி உள்ளார். அதை கட்சியில் பெரிதுபடுத்த வேண்டிய அவசியம் இல்லை.

விழாவுக்கு செல்லாததற்கான காரணமே அதுதான் என்றல்லவா அவர் சொல்லி இருக்கிறார்? – அது விவசாய சங்க கூட்​டமைப்​பினர் நடத்திய விழா. அதில் புரட்​சித்தலை​வர், புரட்​சித்தலைவி படங்களை வைப்பது குறித்து முடி​வெடுக்க அவர்​களுக்கு உரிமை உண்டு. அதேசம​யம், அவர்​களின் படங்களை வைக்க வேண்​டும் என்பது சட்டம் இல்லை. அது கட்சி விழா அல்ல. அதனால் அவர்கள் படம் வைக்​காத​தால் கலந்து கொள்ள​வில்லை என்று சொன்னது விவசாய சங்கத்​தினரின் விழா​வைத் தானே தவிர கட்சி விழாவை அல்ல.

மறுநாள் நடந்த டெல்லி அதிமுக அலுவலகம் திறப்பு விழாவுக்கும் அவர் செல்லவில்லையே? – அவர் போகாததற்கு ஆயிரம் காரணங்கள் இருக்​கும். அவர் ஒரு பெரிய அரசி​யல்​வாதி. தினமும் பல நல்லது, கெட்​டதுகளில் கலந்து கொள்ள வேண்டி இருக்​கும். எனவே அவர் போகாததற்கு வேறு முக்கிய காரணங்கள் இருக்​கும். அதிருப்​தி​தான் காரணம் என்று சொல்​ல​முடி​யாது.

அண்ணன் செங்​கோட்​டையன் அதிமுக-​வின் மூத்த முதுபெரும் தலைவர். புரட்​சித்தலைவர் எம்ஜிஆர் அரி ஓம் என்று அரசி​யலுக்கு வந்த காலத்​தில் இருந்து இன்று வரை அதிமுக-​வில் தொடர்ந்து பயணிப்​பவர். அதனால் அவருக்கு யாரும் சொல்​லிக் கொடுக்க வேண்​டியதும் இல்லை; அவரைக் குறை சொல்​ல​வும் முடி​யாது.

அவரிடம் இருந்த தலைமை நிலைய செயலாளர் பதவியை எஸ்.பி. வேலுமணியிடம் கொடுத்தார் பழனிசாமி. அதிமுக கள ஆய்வு குழுவில் செங்கோட்டையனை சேர்க்கவில்லை. இதெல்லாம் அவரை புறக்கணிப்பதுபோல் இருக்கிறதே? – ஈரோடு மாவட்​டத்​தின் மொத்த பொறுப்​பாள​ருமே அவர்​தான். அதை கவனிக்கவே அவருக்கு நேரம் போதாது. நான் அதிமுக-​வில் கொள்கை பரப்புச் செயலா​ளராக இருந்​தேன். புரொட்​டோ​கால் படி ஐந்தாவது இடத்​தில் இருந்​தேன். ஆனால் அதற்​குப் பிறகு அம்மா என்னை பொறுப்​பில் இருந்து நீக்​கி​னார்​கள். பிறகு சேர்த்​தார்​கள். மாவட்ட செயலாளர் பதவி கொடுத்​தார்​கள்.

எம்எல்ஏ சீட் கொடுத்து மந்திரி​யும் ஆக்கி​னார்​கள். ஆனால் ஐந்தாவது இடத்​தில் இருந்த என்னை 13-வது இடத்​தில் வைத்​தார்​கள். அதற்காக அம்மாவை கோபித்​துக் கொள்ள இயலுமா? ஆனால், செங்​கோட்​டையன் விஷயத்​தில் அப்படி எதுவும் இல்லை. எடப்​பாடி​யார் தலைமைக் கழகத்​தில் நடக்​கும் எந்த ஒரு தனி ஆய்வை​யும் செங்​கோட்​டையனை விட்டு​விட்டு நடத்​தியதே கிடை​யாது.

வருத்தத்தில் இருக்கும் செங்கோட்டையன் வேறு ஏதேனும் முடிவுகள் எடுக்க வாய்ப்பு உள்ளதா? – அப்​படி​யெல்​லாம் எதுவும் இல்லை. அவர் நேற்று முன்​தினமே அதற்​கெல்​லாம் விளக்​கமாக பதில் அளித்து​விட்​டார். அவர் தவறாக எந்த முடி​வும் எடுக்​க​மாட்​டார்; அப்படி எடுக்​கும் ஆளும் அவர் இல்​லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here