புதிய ஊரக வேலை திட்டம் பேரழிவை ஏற்படுத்தும்: காங். மூத்த தலைவர் சோனியா கருத்து

0
14

காங்​கிரஸ் மூத்த தலை​வர் சோனியா காந்​தி, ‘தி இந்​து’ நாளிதழில் ‘மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்​டத்​தின் (எம்​ஜிஎன்​ஆர்​இஜிஏ) புல்​டோசர் அழிப்​பு’ என்ற தலைப்​பில் ஒரு கட்​டுரை எழுதி உள்​ளார். அதில் கூறி​யிருப்​ப​தாவது:

கிராமப்​புற மக்​களுக்கு வேலை வாய்ப்பை உறுதி செய்​வதற்​காக, டாக்​டர் மன்​மோகன் சிங் தலை​மையி​லான ஆட்​சி​யின்​போது எம்​ஜிஎன்​ஆர்​இஜிஏ திட்​டம் கொண்​டு​வரப்​பட்​டது. இதற்​காக கடந்த 2005-ம் ஆண்டு ஒரு சட்​டம் இயற்​றப்​பட்​டது. இது அனை​வருக்​கும் நல்​வாழ்வு கிடைக்க வேண்​டும் என்ற மகாத்மா காந்​தி​யின் கனவை நனவாக்​கியது.

இந்​நிலை​யில், நரேந்​திர மோடி தலை​மையி​லான அரசு எவ்​வித விவாதமோ, ஆலோ​சனையோ இல்​லாமல் இந்த திட்​டத்தை ஒழிக்​கும் பணி​களை தீவிர​மாக மேற்​கொண்​டது. இந்த திட்​டத்​தில் இருந்த மகாத்மா காந்தி பெயர் நீக்​கப்​பட்​டு, விபி-ஜி ராம் ஜி என்ற பெயரில் புதிய சட்​டம் இயற்​றப்​பட்​டுள்​ளது.

தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்தில் மாற்றங்கள் கொண்டு வருவது கோடிக்கணக்கான கிராமப்புற மக்களுக்குப் பேரழிவை ஏற்படுத்தும். எனவே, அவர்களின் உரிமையை பாதுகாக்க அனைவரும் முன்வர வேண்டும். இவ்​வாறு அதில்​ கூறப்​பட்​டுள்​ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here