10 ஆண்டு கால தடைக்குப் பின் ரூ.25,000 எடுத்துச் செல்ல நேபாள அரசு அனுமதி

0
12

நேபாள அரசு வெளி​யிட்​டுள்ள செய்​திக்​குறிப்​பில் தெரி​வித்​துள்​ள​தாவது: உயர் மதிப்​புள்ள இந்​திய கரன்​சிகளை கொண்டு செல்​வதற்​கான ஒரு தசாப்த கால தடை, முடிவுக்கு கொண்​டு​வரப்​பட்​டுள்​ளது.

தற்​போது தளர்த்​தப்​பட்​டுள்ள கட்​டுப்​பாடு​களின்​படி ஒரு நபர் அதி​கபட்​ச​மாக ரூ.25,000 மதிப்​புள்ள 200, 500 ரூபாய் இந்​திய நோட்​டு​களை வைத்​திருக்க முடி​யும். திங்​கள்​கிழமை நடை​பெற்ற அமைச்​சரவை கூட்​டத்​தில் இந்த முடிவு எடுக்​கப்​பட்​டது.

திருத்​தப்​பட்ட விதி​யின்​படி, நேபாள மற்​றும் இந்​திய குடிமக்​கள் இரு​வரும் உயர் மதிப்​புள்ள ரூபாய் நோட்​டு​களை இந்​தி​யா​விலிருந்து நேபாளத்​துக்கு கொண்டு வரலாம் அல்​லது நேபாளத்​திலிருந்து இந்​தி​யா​வுக்கு எடுத்​துச் செல்​லலாம்.

இவ்​வாறு செய்​திக்​குறிப்​பில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது. இதுகுறித்து நேபாள ராஷ்டிர வங்​கி​யின் (என்​ஆர்​பி) செய்​தித் தொடர்​பாளர் குரு பிர​சாத் பவுடலின் கூறுகை​யில், “அரசின் முடிவு அரசிதழில் வெளி​யிடப்​பட்​ட​வுடன் என்​ஆர்பி இதுதொடர்​பான ஒரு சுற்​றறிக்​கையை வெளி​யிடும்.

இது, இந்​தி​யா​விலிருந்து நேபாளத்துக்கு அல்​லது நேபாளத்​திலிருந்து இந்​தி​யா​வுக்கு பயணம் செய்​யும் தனி​நபர்​கள் உயர்​ம​திப்​புள்ள இந்​திய ரூபாய் நோட்​டு​களை பயன்​படுத்​து​வதை சட்​டப்​பூர்​வ​மாக்​கும்​’’ என்​றார்​.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here