சி.வி.சண்முகத்துடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு

0
45

​திண்​டிவனத்​தில் அதி​முக முன்​னாள் அமைச்​சரும், எம்​.பி.​யு​மான சி.​வி.சண்​முகத்​தை, பாஜக மாநிலத் தலை​வர் நயினார் நாகேந்​திரன் நேற்று சந்​தித்​தார். அதி​முக​வில் இருந்து பிரிந்து சென்​றவர்​களை ஒன்​றிணைக்க வேண்​டும் என்று தான் உட்பட 6 பேர் அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமியை சந்​தித்து வலி​யுறுத்தி இருந்​த​தாக முன்​னாள் அமைச்​சர் செங்​கோட்​டையன் தெரி​வித்​திருந்​தார்.

இந்த 6 பேரில் சி.​வி.சண்​முகமும் ஒரு​வர். இந்​நிலை​யில், விழுப்​புரம் மாவட்​டம் திண்​டிவனத்​தில் வசிக்​கும் சி.​வி.சண்​முகத்​தை, பாஜக மாநிலத் தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் நேற்று சந்​தித்​துப் பேசி​னார். இரு​வரும் சுமார் 30 நிமிடங்​கள் ஆலோ​சனை நடத்தினர்.

இதுகுறித்து பாஜக​வினர் கூறும்​போது, “அதி​முக-​பாஜக கூட்​டணி கூட்​ட​ணி​யில் முக்​கியக்கட்சி என்​ப​தால், அதி​முக பொதுச்செய​லா​ளர் மற்​றும் மூத்த நிர்​வாகி​களை சந்​தித்​து, இணக்​க​மான சூழலை ஏற்​படுத்​து​மாறு நயி​னார் நாகேந்​திரனுக்கு டெல்லி மேலிடம் அறி​வுறுத்தி உள்​ளது.

அதன்​படி, முன்​னாள் அமைச்​சர் சி.​வி.சண்​முகத்தை நயி​னார் நாகேந்​திரன் சந்​தித்து ஆலோ​சனை நடத்​தி​னார். அதி​முக​வில் இருந்து பிரிந்து சென்​றவர்​களை மீண்​டும் ஒன்​றிணைப்​பது, பாமக நிறு​வனர் ராம​தாஸை சந்​தித்து கூட்​ட​ணி​யில் பங்​கேற்​கச் செய்​வது குறித்து இரு​வரும் ஆலோ​சனை நடத்தி இருக்​கலாம்” என்​றனர்​.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here