தேசிய தரவரிசை டேபிள் டென்னிஸ் போட்டி: கால் இறுதியில் சத்தியன்

0
29

தேசிய தரவரிசை டேபிள் டென்னிஸ் போட்டி டெல்லியில் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் பெட்ரோலிய விளையாட்டு மேம்பாட்டு வாரிய வீரர் சத்தியன் 3-0 என்ற கணக்கில் டெல்லியை சேர்ந்த சுதான்ஷு குரோவரை வீழ்த்தி கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

மேற்கு வங்​கத்​தின் அங்​கூர் பட்​டாச்​சார்ஜி 3-1 என்ற கணக்​கில் பெட்ரோலிய விளை​யாட்டு மேம்​பாட்டு வாரிய வீரர் பிரீயேஷ் ராஜ் சுரேஷையும், இந்​திய தணிக்கை மற்​றும் கணக்​குத் துறையை சேர்ந்த எஸ்​எஃப்​ஆர் ஸ்நேகித் 3-2 என்ற கணக்​கில் அசாமின் பிரி​யானுஜ் பட்டாச்​சார்​யா​வை​யும், பெட்​ரோலிய விளை​யாட்டு மேம்​பாட்டு வாரி​யத்​தின் ஹர்​மித் தேசாய் 3-2 என்ற கணக்​கில் தமிகழத்​தின் தருண் சண்​முகத்​தை​யும், டெல்​லி​யின் பயாஸ் ஜெயின் 3-0 என்ற கணக்​கில் மேற்கு வங்​கத்​தின் அங்​கித் சென் சவுத்​ரியை​யும் தோற்​கடித்து கால் இறுதி சுற்​றில் கால்​ப​தித்​தனர்.

மகளிர் ஒற்றையர் பிரிவில் தியா சித்தலே (ஆர்பிஐ), தனீஷா கோட்டேசா (மகாராஷ்டிரா), யஷஸ்வினி கோர்படே (பிஎஸ்பிபி), ரீத் ரிஷ்யா (பிஎஸ்பிபி) ஆகியோர் கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினர். தமிழகத்தின் செலினா தீப்தி 2-3 என்ற கணக்கில் சுதிர்தா முகர்ஜியிடமும் (ஆர்எஸ்பிபி), நித்ய மணி 1-3 என்ற கணக்கில் மேற்கு வங்கத்தின் சின்ட்ரலா தாஸிடமும் தோல்வி அடைந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here