மூன்று மாதங்களாக காலியாக உள்ள துணை வட்டாட்சியர் பணியிடங்களை தற்காலிக பதவி உயர்வு மூலம் நிரப்பாமல் காலம் தாழ்த்துவதை கண்டித்து, வருவாய் ஊழியர்கள் நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தகுதியான நபர்கள் இருந்தும் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பது வருவாய் துறையில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. உடனடியாக பணியிடங்களை நிரப்ப வேண்டும் என அவர்கள் வலியுறுத்துகின்றனர். இந்த போராட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.
