பிரபல இந்தூர் ஷீதலா மாதா மார்க்கெட்டில் முஸ்லிம் விற்பனையாளர்களுக்கு தடை: உள்ளூர் பாஜக தலைவர் உத்தரவால் சர்ச்சை

0
12

 மத்​திய பிரதேச மாநிலம் இந்​தூரில் பிரபல ஷீதலா மாதா மார்க்​கெட் உள்​ளது. இங்கு பெண்​களுக்​கான ஆடைகள் மொத்த​மாக விற்​கப்​படு​கின்​றன. இந்​தியா மட்​டுமன்றி சர்​வ​தேச அளவில் இந்த மார்க்​கெட் பிரபல​மாக உள்​ளது. இங்கு 501 கடைகள் உள்​ளன. சமீபத்​தில் இந்த மார்க்​கெட் செயல்​பாடு​கள் குறித்த ஆலோ​சனை கூட்​டம் நடை​பெற்​றுள்​ளது.

அதில் உள்​ளூர் பாஜக தலை​வரும் எம்​எல்ஏ மகனு​மான ஏகலைவா சிங் கவுர் பங்​கேற்​றுள்​ளார். கூட்​டத்​தில் அவர் பேசும்​போது, ‘‘ஷீதலா மாதா மார்க்​கெட்​டில் உள்ள 501 கடைகளி​லும் முஸ்​லிம் விற்​பனை​யாளர்​களுக்கு அனு​மதி இல்​லை’’ என்று உத்தரவிட்டுள்ளார்.

இது பெரும் சர்ச்​சையை ஏற்​படுத்தி உள்​ளது. எனினும், ‘லவ் ஜிகாத்​’தை தடுக்​கவே இந்த நடவடிக்கை எடுக்​கப்​படு​வ​தாக கூறப்படு​கிறது. ஆனால், மார்க்​கெட்​டில் பல ஆண்​டு​களாக வேலை செய்து வரும் நூற்​றுக்​கணக்​கான முஸ்​லிம்​கள் பீதி​யில் உள்ளனர்.

இதுகுறித்து ஷீதலா மாதா மார்க்​கெட் பொதுச் செயலர் பப்பு மகேஸ்​வரி கூறும்​போது, ‘‘சமீபத்​தில் மார்க்​கெட்​டில் கூட்​டம் நடை​பெற்​றது உண்​மை. அப்​போது எடுக்​கப்​பட்ட முடிவை​யும் நாங்​கள் ஏற்​றுக் கொண்​டுள்​ளோம். ஷீதலா மாதா மார்க்​கெட்​டில் வேலை செய்​யும் முஸ்​லிம் இளைஞர்​கள் அனை​வரும் வெளி​யேற உத்​தர​விடப்​பட்​டுள்​ளது. வாடகைக்கு உள்ள முஸ்​லிம் கடைகளை​யும் காலி செய்ய கூறி​யிருக்​கிறோம். அவர்​களுக்கு 2 மாத கால அவகாசம் வழங்​கப்​பட்​டுள்​ளது’’ என்​றார்.

அதே​நேரத்​தில், ‘‘மார்க்​கெட்​டில் முஸ்​லிம் பெண்​கள் வந்து ஆடை வகைகளை வாங்​கிக் கொள்​ளலாம். அவர்​களுக்கு எந்த பாரபட்​ச​மும் பார்க்க மாட்​டோம்’’ என்று பப்பு கூறி​யுள்​ளார். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்​ளது. மார்க்​கெட்​டில் துணி​களை வாங்​குபவர்​களாக முஸ்​லிம் பெண்​கள் வரலாம். ஆனால், விற்​பவர்​களாக முஸ்​லிம் இளைஞர்​கள் இருக்க கூடா​தா?’’ என்று விமர்​சனம் எழுந்​துள்​ளது.

இதுகுறித்து இந்​தூர் காங்​கிரஸ் தலை​வர் சிண்டு சவுக்சே கூறும்​போது, ‘‘மதம், சமூகம், ஜாதி அடிப்​படை​யில் மக்​கள் சண்டை போட வேண்​டும் என்​பது ஒன்​று​தான் பாஜக.​வின் நோக்​கம். இந்​து, முஸ்​லிம், சீக்​கியர், கிறிஸ்​தவர் என அனை​வருக்​கும் இந்​தி​யா​வில் சம உரிமை உள்​ளது.

எனவே, இந்த விஷ​யத்​தில் இந்​தூர் மாவட்ட ஆட்​சி​யர், போலீஸ் ஆணை​யர் ஆகியோர் உடனடி​யாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்​கள் நடவடிக்கை எடுக்​கா​விட்​டால், இந்​தூரில் மாபெரும்​ எதிர்ப்​பு போ​ராட்​டத்​தை காங்​கிரஸ்​ நடத்​து​ம்​’’ என்​றார்​.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here