கடந்த 1993-ம் ஆண்டு அக்டோபர் 12-ம் தேதி உத்தர பிரதேசத்தின் நொய்டாவில் வசித்த அருண் மிஸ்த்ரி, பிஹார் மாநிலம் சமஸ்திபூரில் வசித்த தந்தை மதன் மஹதோவுக்கு ரூ.1,500 மணி ஆர்டர் அனுப்பியுள்ளார்.
அப்போது நொய்டா அஞ்சலகத்தில் உதவி போஸ்ட் மாஸ்டராக பணியாற்றிய மகேந்திர குமார், அந்தப் பணத்தை கையாடல் செய்துள்ளார்.
இது தொடர்பாக நொய்டா கூடுதல் தலைமை ஜுடீசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் விசாரணை முடிந்த நிலையில், மகேந்திர குமாருக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும் ரூ.10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.
            













