Home கன்னியாகுமரி செய்திகள் மார்த்தாண்டம்: தனியார் மருத்துவமனையில் கலெக்டர் ஆய்வு

மார்த்தாண்டம்: தனியார் மருத்துவமனையில் கலெக்டர் ஆய்வு

0

மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கடந்த சில நாட்களுக்கு முன் பிரசவத்தின் போது ஸ்மைலின் என்ற பெண் பலியானார். இதையடுத்து இறந்த பெண்ணின் உறவினர்கள் சடலத்துடன் ஆஸ்பத்திரி முன்பு போராட்டம் நடத்தினார்கள். 

பேச்சுவார்த்தையின் முடிவில் ஆஸ்பத்திரியின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் கூறியதால் சடலத்தை உறவினர்கள் எடுத்துச் சென்றனர். இந்த நிலையில் நேற்று அந்த மருத்துவமனையில் கலெக்டர் அழகு மீனா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வில் சார் ஆட்சியர் வினய்குமார் மீனா, துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version