கல்லுக்கூட்டம் பேரூராட்சியில் துப்புரவு பணியாளராக பணிபுரியும் விமலா (40) நேற்று முன்தினம் லட்சுமிபுரம் கல்லூரி பேருந்து நிறுத்தத்தில் பேருந்துக்காக காத்திருந்தபோது, அவரது கணவரின் தம்பி கிருஷ்ணகுமார் தகராறு செய்து கல்லால் தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த விமலா குளச்சல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து குளச்சல் போலீசார் கிருஷ்ணகுமார் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
