குமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில், ஆவணி அஸ்வதி பொங்கல் விழாவின் முக்கிய நிகழ்வாக சுமங்கலி பூஜை நேற்று புதன்கிழமை இரவு நடைபெற்றது. இதில் பெண்கள் அனைவரும் தீர்க்க சுமங்கலியாக இருக்க வேண்டியும், எல்லாவித நன்மையும் பெற்று வாழ சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. கைலாய மலையில் சிவனும் பார்வதியும் திருமண கோலத்தில் காட்சியளிக்கும் திருமண நிகழ்ச்சியின் போது, பெண்கள் லலிதா சஹஸ்ர நாமம் கூறி தங்கள் கழுத்தில் திருமாங்கல் தாலிக்கயிற்றை கட்டி அம்பாளை வணங்கினர். இதில் சுமங்கலி பெண்கள் கலந்து கொண்டனர்.