ஆர்​எஸ்​எஸ் அமைப்​புக்கு எதி​ராக பேசிய மல்​லி​கார்​ஜுன கார்​கே​வின் மகனுக்கு கொலை மிரட்​டல்

0
14

ஆர்​எஸ்​எஸ் அமைப்​புக்கு தடை விதிக்க வேண்​டும் என வலி​யுறுத்​திய காங்​கிரஸ் தலை​வர் மல்​லி​கார்​ஜுன கார்கேவின் மகனுக்கு மர்ம நபர்​கள் கொலை மிரட்​டல் விடுத்​துள்​ளனர்.

கர்​நாடக தகவல் தொழில்​நுட்ப மற்​றும் பஞ்​சா​யத்து நிர்​வாகத்​துறை அமைச்​சரும்​,​காங்​கிரஸ் தேசிய தலை​வர் மல்​லி​கார்​ஜுன கார்​கே​வின் மகனு​மான பிரி​யாங்க் கார்கே அண்​மை​யில் முதல்​வர் சித்​த​ராமை​யா​வுக்கு கடிதம் ஒன்றை எழு​தி​னார்.

அதில், “ஆர்​எஸ்​எஸ் அமைப்​பினர் பொது இடங்​களில் பயிற்சி மேற்​கொள்​வதற்கு தமிழகம் மற்​றும் கேரளா​வில் தடை விதிக்​கப்​பட்​டுள்​ளது போல், கர்​நாட​கா​விலும் தடை விதிக்க வேண்​டும்” என வலி​யுறுத்​தி​னார்.

இதையடுத்து இதற்​கான நடவடிக்கை குறித்து ஆரா​யு​மாறு, தலைமை செயலருக்கு முதல்​வர் சித்​த​ராமையா உத்​தர​விட்​டார் இந்​நிலை​யில் பிரி​யாங்க் கார்கே வெளி​யிட்ட அறிக்​கை​யில், “ஆர்​எஸ்​எஸ் அமைப்பை விமர்​சித்​த​தால் இது​வரை 500-க்​கும் மேற்​பட்ட மிரட்​டல் தொலை​பேசி அழைப்​பு​கள் எனக்கு வந்​துள்​ளன.

என்னை கொலை செய்து விடு​வ​தாக சிலர் மிரட்​டினர். எனது வீட்​டுக்கு வெடிகுண்டு வைத்து விடு​வ​தாக​வும்​ மிரட்​டினர்​. இத்தகைய மிரட்டலை கண்டு நான் அஞ்சவில்லை. சட்டப்படி இதனை கையாளப் போகிறேன்” என்​றார்​.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here