மகாராஷ்டிர மாநிலம், மும்பை சாலைகளின் பரிதாப நிலை மற்றும் சாலை பள்ளங்களால் ஏற்படும் உயிரிழப்புகள் குறித்து மும்பை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தியது. இந்த வழக்கில் நீதிபதிகள் ரேவதி மோஹிதே தேரே, சந்தேஷ் பாட்டீல் ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று தீர்ப்பு வழங்கியது.
இந்த தீர்ப்பில் கூறியிருப்பதாவது: குடிமக்கள் நல்ல சாலைகளுக்கு உரிமை உடையவர்கள். சாலை பள்ளங்கள் அல்லது திறந்தவெளி சாக்கடைகளால் உயிரிழப்பு ஏற்பட்டால், இறந்தவரின் சட்டப்பூர்வ வாரிசுகளுக்கு ரூ.6 லட்சமும் காயம் அடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் முதல் ரூ.2.5 லட்சம் வரையும் அரசு இழப்பீடு வழங்க வேண்டும்.
பிறகு இந்த தொகையை ஒப்பந்ததாரர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் இருந்து வசூலிக்க வேண்டும். பாதிக்கப்படும் குடும்பங்களுக்கு வேறு எந்த சட்டத்தின் கீழ் இழப்பீடு வழங்கப்பட்டாலும் கூடுதலாக இந்த நிவாரணம் வழங்கப்பட வேண்டும். இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.