லயோனல் மெஸ்ஸி இன்று முதல் 3 நாட்கள் இந்தியாவில் சுற்றுப்பயணம்

0
22

அர்​ஜெண்​டினா கால்​பந்து அணி​யின் நட்​சத்​திர வீர​ரான லயோனல் மெஸ்ஸி மற்​றும் அவரது அணி​யினர் ‘கோட் இந்​தியா டூர்’ எனும் பெயரில் இன்று (13-ம் தேதி) முதல் 3 நாட்​கள் இந்​தி​யா​வில் சுற்​றுப்​பயணம் செய்து பல்​வேறு நிகழ்ச்​சிகளில் கலந்து கொள்ள உள்​ளனர்.

மெஸ்​ஸி, இந்​தி​யா​வுக்கு வருகை தரு​வது இது 2-வது முறை​யாகும். கடைசி​யாக அவர், கடந்த 2011-ம் ஆண்டு கொல்​கத்​தா​வில் நடை​பெற்ற சர்​வ​தேச நட்​புரீ​தியி​லான கால்​பந்து போட்​டி​யில் பங்​கேற்​றிருந்​தார்.

ஆனால் இம்​முறை மெஸ்ஸி முற்​றி​லும் வணிக ரீதியி​லான அடிப்​படை​யில் கொல்​கத்​தா, ஹைத​ரா​பாத், மும்பை மற்​றும் டெல்​லி​யில் நடை​பெறும் நிகழ்ச்​சிகளில் கலந்து கொள்​கிறார். கொல்​கத்​தா​வில் இன்று காலை 9.30 மணிக்கு ரசிகர்​களு​டன் நடை​பெறும் சிறப்பு சந்​திப்பு நிகழ்ச்​சி​யில் பங்​கேற்​கிறார். தொடர்ந்து விஐபி சாலை​யில் உள்ள பூமி கடி​கார கோபுரத்துக்கு அரு​கில் அமைக்​கப்​பட்​டுள்ள தனது 70 அடி உயர சிலையை மெஸ்ஸி திறந்து வைக்​கிறார்.

இந்த சிலை​யை ​தான் தங்​கி​யுள்ள நட்​சத்​திர ஓட்​டலில் இருந்​த​படியே காணொலி வாயி​லாக மெஸ்ஸி திறந்து வைக்க உள்​ளார். இது உலகில் மெஸ்ஸிக்காக அமைக்கப்படும் மிக உயரமான சிலையாகும். தொடர்ந்து சால்ட் லேக் மைதானத்​தில் நடை​பெறும் நிகழ்ச்​சி​யில் பங்​கேற்​கிறார். இந்த நிகழ்ச்​சிக்​காக 75 ஆயிரம் டிக்​கெட்​கள் விற்​பனை செய்​யப்​பட்​டுள்​ளன. கொல்​கத்தா நிகழ்ச்​சிகளை முடித்​துக் கொண்டு பிற்​பகல் 2 மணிக்கு ஹைத​ரா​பாத் செல்​கிறார் மெஸ்​ஸி.

அங்கு இரவு 7 மணிக்கு ராஜீவ் காந்தி சர்​வ​தேச மைதானத்​தில் தெலங்​கானா முதல்​வர் ரேவந்த் ரெட்​டி​யுடன் 7 பேர் கொண்ட கால்​பந்​துப் போட்​டி​யில் விளை​யாடு​கிறார். அப்​போது இசை நிகழ்ச்​சி​யும் நடை​பெறுகிறது.

இந்த நிகழ்ச்​சிகளை முடித்​துக்கு கொண்டு இரவில் மும்பை புறப்​பட்​டுச் செல்​கிறார். 14-ம் தேதி மும்​பை​யில் நடை​பெறும் பல்​வேறு நிகழ்ச்​சிகளில் கலந்​து​கொள்​கிறார். இறு​தி​யாக 15-ம் தேதி டெல்​லி​யில் தனது பயணத்தை நிறைவு செய்​கிறார் லயோனல் மெஸ்​ஸி. அப்​போது அவர், பிரதமர் நரேந்​திர மோடியை சந்​தித்​து பேசுகிறார்​. இந்திய வருகையொட்டி மெஸ்ஸிக்கு ‘இசட்’ பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here