நாகர்கோவிலில் இந்திய கிளினிக் மருத்துவர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் பங்கேற்ற சங்கத் தலைவர் பெனிஸ் ராஜா, பாரம்பரிய மருத்துவத்தை மீண்டும் நிலைநிறுத்த பாரம்பரிய மருத்துவர்களுக்கு அரசு பதிவு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார். புதிதாக அமைந்திருக்கும் அரசு இந்தக் கோரிக்கை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
