குழித்துறை பேருந்து நிலையத்தில் ஆதரவின்றி காணப்பட்ட முதியவரை, கன்னியாகுமரி மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு தலைவர் மாவட்ட நீதிபதி கார்த்திகேயன் உத்தரவின் பேரில், குழித்துறை வட்ட சட்ட பணிகள் குழு தலைவர் சார்பு நீதிபதி சுந்தரி அறிவுறுத்தலின் பேரில், இலவச சட்ட உதவி வழக்கறிஞர்கள், காவல் அதிகாரிகள், சமூக சேவகர் மற்றும் ஓட்டுநர் ஆகியோர் இணைந்து தொலையாவட்டம் அன்பாலயம் காப்பகத்தில் நேற்று ஒப்படைத்தனர். இந்த நடவடிக்கை முதியவருக்கு ஆறுதல் அளித்துள்ளது.