கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கொல்லங்கோடு நகராட்சியில், வார்டு 3-ல் சவரிகுளம் சாலை மற்றும் வார்டு 6-ல் சித்திரவிளை-ஆனாடு சானல் கரையில் பக்கச்சுவர் அமைக்கவும், அரசு நடுநிலை பள்ளி லெட்சுமி புதுக்கடையில் மாணவ, மாணவிகள் பயன்பாட்டிற்கு கழிவறை அமைக்கவும் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்ட நிதியிலிருந்து மொத்தம் ரூ. 30 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. நேற்று இந்த பணிகளை ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.