கிள்ளியூர்: தி மு க பூத் முகவர்கள் கூட்டம்

0
161

கிள்ளியூர் தெற்கு ஒன்றிய திராவிட முன்னேற்றக் கழகத்தின் பூத் லெவல் பாக முகவர்கள் கூட்டம் நேற்று பாலூர் கருங்கல் அலுவலகத்தில் வைத்து மாலை நடைபெற்றது. ஒன்றிய அவைத் தலைவர் பாலூர் தேவா தலைமையில், ஒன்றிய செயலாளர் பி கோபால் கலந்துகொண்டு ஒன்றிய கழகத்தின் பூத்து லெவல் முகவர்கள் செயல்பட வேண்டிய குறித்து ஒன்றிய கழக நிர்வாகிகளுக்கு எடுத்துக் கூறி னார்.

      தொகுதி பொறுப்பாளர் திரு ஆவின் ஆறுமுகம் கலந்து கொண்டு பாக முகவர்கள் செயல்பட வேண்டிய கழகப் பணிகளை எடுத்துக் கூறினார்கள். ஒன்றிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.   

     நிகழ்ச்சியில்  பாக முகவர்கள் தங்கள் பகுதியில் உள்ள பூத்துகளுக்கு சென்று வாக்காளர் பெயர் சேர்த்தல் நீக்கல் போன்ற பணிகளை தவறாமல் கண்காணித்து புதிய வாக்காளர்களை வாக்காளர் படிவத்தில் சேர்க்க வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here