கிள்ளியூர்: மீன் தொழிலாளர் சங்கம் கையெழுத்து இயக்கம்

0
309

குமரி மாவட்ட மீன் தொழிலாளர் சங்கம் சார்பில் மீனவர்களின் வாழ்வாதார கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வலியுறுத்தி கையெழுத்து இயக்கம் நிகழ்ச்சி கிள்ளியூர் தொகுதிக்குட்பட்ட நீரோடியில் நேற்று தொடங்கியது. நிகழ்ச்சிக்கு முன்சிறை ஒன்றிய தலைவர் பிராங்க்ளின் தலைமை வகித்தார். செயலாளர் எஸ்கலின், ஒன்றிய செயலாளர் விமல் ராஜ் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த கையெழுத்து இயக்கம் நீரோடியிலிருந்து துவங்கி இன்று (22-ம் தேதி) கிள்ளியூர் தொகுதி மற்றும் மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து மீனவ கிராமங்களிலும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here