சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் தாய், ஆண் நண்பருக்கு 180 ஆண்டு சிறை தண்டனை: கேரள போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு

0
9

கேரளா​வில் 12 வயது சிறுமி பாலியல் வன்​கொடுமை செய்​யப்​பட்ட வழக்​கில், தாய், அவரது ஆண் நண்​பருக்கு 180 ஆண்டு சிறை தண்​டனை விதிக்​கப்​பட்​டுள்​ளது. கேரள மாநிலம் திரு​வனந்​த​புரத்​தைச் சேர்ந்த ஒரு பெண் தன் கணவர் மற்​றும் ஒரு பெண் குழந்​தை​யுடன் வசித்து வந்​துள்​ளார்.

அப்​போது, வேறு ஒரு ஆணுடன் பழக்​கம் ஏற்​பட்​டுள்​ளது. இதையடுத்​து, அந்​தப் பெண் கணவரை விட்​டுப் பிரிந்து ஆண் நண்​பருடன் மலப்​புரம் மற்​றும் பாலக்​காடு மாவட்​டங்​களில் வசித்து வந்​துள்​ளார். தனது பெண் குழந்​தையை​யும் தன்​னுடன் தங்க வைத்​துள்​ளார்.

இந்த சூழ்​நிலை​யில், அந்​தப் பெண்​ணின் ஆண் நண்​பர், 12 வயது சிறுமிக்கு மது​பானம் கொடுத்து பல முறை பாலியல் வன்​கொடுமை செய்​துள்​ளார். இதற்கு சிறுமி​யின் தாயும் உடந்​தை​யாக இருந்​துள்​ளார். அத்​துடன் ‘‘இந்த விஷ​யத்தை வெளி​யில் சொல்​லக் கூடாது. மீறி சொன்​னால், உன்​னுடைய மூளை​யில் வைத்​துள்ள சிப் மூலம் எங்​களுக்கு தெரிந்​து​விடும்’’ எனக் கூறி தனது மகளை மிரட்டி உள்​ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்த அக்​கம்​பக்​கத்​தினர் குழந்​தைகள் உதவி மையம், காவல் துறைக்கு தகவல் தெரி​வித்​துள்​ளனர். பின்​னர் போலீ​ஸார் அந்த சிறுமியை மீட்டு குழந்​தைகள் மறு​வாழ்வு மையத்​தில் சேர்த்​தனர். மேலும் சிறுமி​யின் தாய் மற்​றும் அவரது ஆண் நண்​பரை கைது செய்த போலீ​ஸார், அவர்​கள் மீது வழக்குப் பதிவு செய்​தனர்.

இது தொடர்​பான வழக்கை விசா​ரித்த போக்சோ நீதி​மன்ற நீதிபதி அஷ்ரப், சிறுமி​யின் தாய் மற்​றும் அவரது ஆண் நண்​பர் ஆகிய இரு​வரும் குற்​ற​வாளி என அறி​வித்​தார். பின்​னர் இரு​வருக்​கும் தலா 180 ஆண்டு கடுங்​காவல் சிறை தண்​டனை விதித்து நேற்று தீர்ப்​பளித்​தார். அத்​துடன் ரூ.11.7 லட்​சம் அபராத​மும் வி​தித்​தார். இந்​தப் பணத்தை பா​திக்​கப்​பட்ட சிறுமிக்கு வழங்க வேண்​டும் என்​றும்​ நீதிப​தி உத்​தர​விட்​டார்​.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here