Home கன்னியாகுமரி செய்திகள் காட்டாத்துறை: குளத்தில் மிதந்த தொழிலாளி சடலம்

காட்டாத்துறை: குளத்தில் மிதந்த தொழிலாளி சடலம்

0

காட்டாத்துறை பகுதியில் உள்ள ஒரு சலூன் கடையில் வேலை செய்து வந்த திருச்செந்தூரைச் சேர்ந்த ஜெயசீலன் (48), அப்பகுதியில் உள்ள குளத்தில் குளிக்கச் சென்றபோது தடுமாறி விழுந்து உயிரிழந்தார். நேற்று அப்பகுதி மக்கள் குளத்தில் சடலம் மிதப்பதைக் கண்டு திருவட்டார் போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர். போலீசார் சடலத்தை மீட்டு குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெயசீலன் எப்படி இறந்தார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version