கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்துள்ள கோதைகிராமம் காசி விஸ்வநாதர் உடனுறை விசாலாட்சி அம்பாள் கோயிலில் நேற்று தேய்பிறை அஷ்டமியை ஒட்டி காலபைரவருக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. பால், தயிர், பன்னீர், களபம், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வகை பொருட்களினால் அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து சிறப்பு தீபாராதனையும் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.