Home விளையாட்டு செய்திகள் சூர்யவன்ஷி எந்தளவுக்கு தூண்டப்பட்டார் என்பது தெரியவில்லை: சாய்ராஜ் பகதுலே விளக்கம்

சூர்யவன்ஷி எந்தளவுக்கு தூண்டப்பட்டார் என்பது தெரியவில்லை: சாய்ராஜ் பகதுலே விளக்கம்

0

இலங்​கை​யில் நடை​பெற்று வரும் ‘ஏ’ அணி​கள் இடையிலான முத்​தரப்பு ஒரு​நாள் தொடரில் நேற்று முன்​தினம் இந்தியா ஏ – இலங்கை ஏ அணி​கள் மோதின. இதில் சூப்​பர் ஓவரில் இலங்கை ஏ அணி வெற்றி பெற்​றது.

போட்டி முடிவடைந்​ததும் இலங்கை வீரர்​களான விஷேன் ஹலம்பகே, வனுஜ சஹான் ஆகியோர் இந்​திய அணி வீரர்​களான வைபவ் சூர்யவன்ஷி, சூர்​யான்ஷ் ஷெட்கே ஆகியோரை நோக்கி ஏதோ கூறினர். இதனால் கோபம் அடைந்த சூர்​ய​வன்​ஷி, விஷேன் ஹலம்​பகே நோக்​கிச் சென்று அவரது நெஞ்​சில் கை வைத்​துத் தள்​ளி​னார். இதனால் பரபரப்பு ஏற்​பட்​டது. இதையடுத்து இரு அணி வீரர்​களும் அவர்​களை விலக்​கி​விட்​டனர்.

இந்த விவ​காரம் தொடர்​பாக லக்​னோ​வில் நேற்று இந்​திய கிரிக்கெட் சீனியர் அணி​யின் சுழற்​பந்​து​வீச்சு பயிற்​சி​யாள​ரான சாய்ராஜ் பகதுலே கூறிய​தாவது: இலங்​கை​யில் நடந்​தது துரதிர்ஷ்டவசமான சம்​பவம். ஆனால், வைபவ் சூர்​ய​வன்ஷி எந்த அளவுக்​குத் தூண்​டப்​பட்​டார் என்​பது நமக்​குத் தெரி​யாது. ஏனெனில், எனக்​குத் தெரிந்​தவரை வைபவ் மிக​வும் அமை​தி​யான, நிதான​மான வீரர்.

இது ஒரு துர​திர்​ஷ்ட​வச​மான சம்​பவ​மாக இருந்​தா​லும், அங்​குள்ள அனுபவம் வாய்ந்த பயிற்​சி​யாளர்​கள் அவருக்கு நிலை​மையை எடுத்​துக்​கூறி புரிய வைப்​பார்​கள் என்று நான் உறு​தி​யாக நம்புகிறேன். அதே சமயம், இலங்கை வீரர்​களும் மைதானத்​தில் எப்​படி நடந்​து​கொள்ள வேண்​டும் என்​பது குறித்து அவர்​களுக்கு அறி​வுறுத்​தப்பட வேண்​டும் என்று நினைக்​கிறேன். இது நமக்​கும் பொருந்​தும்.

இந்த சம்​பவத்​திலிருந்து சூர்​ய​வன்ஷி நிச்​ச​யம் பாடம் கற்றுக்கொள்​வார். அவர், பல பொறுப்​பு​களைச் சுமக்​கக்​கூடிய, மிக முக்​கிய​மாக இந்​தி​யா​வைப் பிர​தி​நி​தித்​து​வப்​படுத்​தக்​கூடிய ஒரு இளம் வீரர். இனிவரும் காலங்​களில், இது​போன்ற தவறை அவர் மீண்​டும் செய்ய மாட்​டார் என்​றும் நான் நம்​பு​கிறேன். இவ்வாறு அவர்​ கூறினார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version