மார்ச் மாதம் சென்னையில் சர்வதேச டேபிள் டென்னிஸ்

0
225

டபிள்யூடிடி ஸ்டார் கன்டென்டர் டேபிள் டென்னிஸ் தொடர் வரும் மார்ச் 25 முதல் 30-ம் தேதி வரை சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது. இந்தத் தொடரின் மொத்த பரிசுத்தொகை ரூ.2.38 கோடியாகும். 25 மற்றும் 26-ம் தேதிகளில் தகுதி சுற்று ஆட்டங்கள் நடைபெறும். இதைத் தொடர்ந்து பிரதான சுற்று 27 முதல் 30-ம் தேதி வரை நடைபெறுகிறது.

தமிழ்நாட்டில் இந்தத் தொடர் நடைபெறுவது இதுவே முதன்முறையாகும். இந்தத் தொடரின் கடந்த இரு பதிப்புகள் கோவாவில் நடைபெற்றது. 2023-ம் ஆண்டு நடைபெற்ற தொடரில் ஆடவர் பிரிவில் சீனாவின் லியாங் ஜிங்குன்னும், மகளிர் பிரிவில் சீனாவின் வாங் யிடியும் பட்டம் வென்றனர்.

2024-ம் ஆண்டு தொடரில் பிரான்ஸின் பெலிக்ஸ் லெப்ரூன், தைவானின் செங்-ஐ-சிங்கும் மகுடம் சூடினர். சென்னையில் நடைபெற உள்ள டபிள்யூடிடி ஸ்டார் கன்டென்டர் தொடரில் உலகின் முன்னணி வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு தங்களது ஆட்டத்தால் ரசிகர்களுக்கு விருந்து படைக்க உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here