எஸ்டிஏடி உலகக் கோப்பை ஸ்குவாஷ் தொடர் சென்னையில் நடைபெற்று வருகிறது. 12 நாடுகள் கலந்துகொண்டுள்ள இந்தத் தொடரில் நேற்று கால் இறுதி ஆட்டங்கள் நடைபெற்றன. இதில் இந்திய அணி, தென் ஆப்பிரிக்காவுடன் மோதியது. இந்த ஆட்டத்தில் இந்தியா 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று அரை இறுதிக்கு முன்னேறியது.
மகளிர் பிரிவில் நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியாவின் ஜோஷ்னா சின்னப்பா, டீகன் ரஸ்ஸலுடன் மோதினார். அதில் ஜோஷ்னா 7-4, 7-4, 7-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். 2-வது ஆட்டத்தில் ஆடவர் பிரிவில் இந்தியாவின் அபய் சிங் 7-1, 7-6, 7-1 என்ற செட் கணக்கில் டெவால்ட் வான் நிகெர்க்கை தோற்கடித்தார்.
தொடர்ந்து நடைபெற்ற மகளிர் ஆட்டத்தில் இந்தியாவின் அனஹத் சிங் 7-3, 7-3, 7-4 என்ற செட் கணக்கில் ஹேலி வார்டை வீழ்த்தினார்.
இன்று நடைபெறும் அரை இறுதி ஆட்டத்தில் இந்திய அணி நடப்பு சாம்பியனான எகிப்துடன் பலப்பரீட்சை நடத்துகிறது. எகிப்து அணி கால் இறுதி ஆட்டத்தில் 3-0 என்ற கணக்கில் வெற்றி ஆஸ்திரேலியாவை தோற்கடித்தது. இன்று நடைபெறும் மற்றொரு அரை இறுதியில் ஹாங் காங் – ஜப்பான் அணிகள் மோதுகின்றன.
ஹாங் காங் அணி கால் இறுதி சுற்றில் 3-0 என்ற கணக்கில் சுவிட்சர்லாந்தை வென்றது. ஜப்பான் அணி, மலேசியாவுக்கு எதிரான ஆட்டத்தை 2-2 என்ற கணக்கில் சமன் செய்திருந்தது. எனினும் லீக் சுற்றில் அதிக செட்களை வென்றதன் அடிப்படையில் ஜப்பான் கால் இறுதி சுற்றுக்கு முன்னேறியது.







