மேற்கு வங்​க கிரிக்கெட் சங்கம் சார்பில் இந்திய கிரிக்கெட் வீராங்கனை ரிச்சா கோஷுக்கு தங்க மட்​டை, பந்து

0
12

ஐசிசி மகளிர் ஒரு​நாள் கிரிக்​கெட் உலகக் கோப்​பையை வென்ற இந்​திய அணி​யில் இடம்​பிடித்​துள்ள மேற்கு வங்​கத்​தைச் சேர்ந்த வீராங்​க​னை​யான ரிச்சா கோஷுக்கு தங்க முலாம் பூசப்​பட்ட பேட், பந்தை பரி​சாக வழங்க அம்​மாநில கிரிக்​கெட் சங்​கம்​ (சிஏபி) முடிவு செய்​துள்​ளது.

அண்​மை​யில் முடிவடைந்த மகளிர் உலகக் கோப்பை கிரிக்​கெட் போட்​டி​யில் இந்​திய அணி 52 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் தென் ஆப்​பிரிக்க அணியை வென்று கோப்​பையை முதன்​முறை​யாகக் கைப்​பற்​றியது. இந்​திய அணி​யில் இடம்​பிடித்த ரிச்சா கோஷ் ஒட்​டுமொத்​த​மாக தொடரில் 235 ரன்​கள் விளாசி​னார்.

மேலும், இந்த உலகக் கோப்பை தொடரில் ரிச்சா கோஷ் 12 சிக்​ஸர்​களை விளாசி​யிருந்​தார். இதன் மூலம் ஓர் உலகக் கோப்பை தொடரில் அதிக சிக்​ஸர்​கள் விளாசிய மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணி வீராங்​கனை தியாந்த்ரா தோட்​டினின் சாதனையை ரிச்சா கோஷ் சமன் செய்​திருந்​தார்.

இதையடுத்து அவருக்கு வரும் 8-ம் தேதி கொல்​கத்தா ஈடன் கார்​டன் மைதானத்​தில் பிர​மாண்​ட​மான முறை​யில் பாராட்டு விழாவை மேற்கு வங்க கிரிக்​கெட் சங்​கம் நடத்​தவுள்​ளது.

அப்​போது அவருக்கு தங்க முலாம் பூசப்​பட்ட பேட், பந்து ஆகிய​வற்றை பரி​சாக மேற்கு வங்க கிரிக்​கெட் சங்க நிர்​வாகி​கள் வழங்கி கவுரவிக்க உள்​ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here